Newsஆஸ்திரேலியாவை அதிரவைத்த சகோதரிகளின் மர்ம மரணம் - விசாரணையில் வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவை அதிரவைத்த சகோதரிகளின் மர்ம மரணம் – விசாரணையில் வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இரண்டு சகோதரிகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

சவுதியைச் சேர்ந்தவர்கள் அஸ்ரா (24) , அமால் (23) சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் சிட்னியில் தாங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து ஒரு மாதத்திற்கு பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

ஜூன் மாதம் 7ஆம் திகதி இறந்த அவர்களின் மரணத்துக்கு காரணம் தெரியாமல் சிட்னி பொலிஸார் தவித்து வந்தனர்.

அந்தச் சகோதரிகளின் புகைப்படங்களை ஊடகங்களிடம் வெளியிட்டு அவர்கள் பற்றிய விவரங்களைக் கண்டறிய முயற்சித்தனர். இரு மாதங்களுக்கு மேலாக அந்தச் சகோதரிகள் மரணத்துக்கு காரணம் தெரியாத நிலையில், அவர்களின் மரணத்தில் சிறிய துப்பு ஒன்று பொலிஸாருக்கு தற்போது கிடைத்துள்ளது.

புதுமைப் பாலினத்தை சேர்ந்த பெண் ஒருவர், அந்தச் சகோதரிகள் இருவரையும் கடந்த ஜனவரி மாதம் நடந்த புதுமைப் பாலினத்தவர் நிகழ்வில் கண்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

பொலிஸாரிடம் அந்தப் பெண் கூறும்போது, “அந்த நிகழ்ச்சியில் சகோதரிகள் இருவரும் தனியாக நின்றுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் தயக்கம் இருந்தது. நான் அவர்களிடம் சென்று பேசியபோது அவர்கள் சவுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தனர். சவுதியில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று என்னிடம் கூறினார்கள். நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர்கள் ஒரு வார்த்தையில்தான் பதிலளித்தார்கள். அவர்கள் சிட்னி வந்த பிறகுதான் சுதந்திரத்தை உணர்வதாக தெரிவித்தார்கள். சிட்னியில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் சுற்றிப் பார்க்க இருப்பதாக தெரிவித்தார்கள். அந்தச் சகோதரிகளில் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது” என்றார்.

தங்களது பாலினம் சார்ந்த அச்சத்தில் சகோதரிகள் இருவரும் தங்கள் தாய்நாடான சவுதியிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரியுள்ளனர். இந்தச் சூழலில் தங்கள் பாலினம் குறித்த அச்சத்தில் தங்களை மாய்த்துக் கொண்டனரா என்ற கோணத்திலும் ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தச் சகோதரிகளின் மரணம் குறித்து சவுதி மனித உரிமை ஆணையம் கூறும்போது, “குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் சவுதி பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் அளிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக, அவர்கள் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தப்பிச் செல்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய குடியுரிமை தேர்வில் தேர்ச்சி பெற தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்

ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்பும் புலம்பெயர்ந்தோர் பல தேர்வு வினாத்தாளுக்கு பதிலளிக்க வேண்டும். சமீபகாலமாக இந்த முறை நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற...

வெளியாகிய ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் வருமான தரவு அறிக்கை

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் வருமானம் தொடர்பான தகவல்கள் அடங்கிய தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Oxfam-இன் "Takers Not Makers" அறிக்கை மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில்,...

விக்டோரியாவிலும் பரவிவரும் தக்காளியை அழிக்கும் வைரஸ்

தெற்கு ஆஸ்திரேலியாவில் தக்காளித் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு தாவர வைரஸ் விக்டோரியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. Goulburn பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு கிரீன்ஹவுஸில் Tomato...

Australia Day அன்று விக்டோரியாவின் சூப்பர் மார்க்கெட் திறக்கும் நேரங்கள் இதோ

ஆஸ்திரேலியா தினத்தன்று விக்டோரியா மாநிலம் முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சேவை நிலையங்கள் திறக்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை ஜனவரி 26 ஆம்...

Australia Day அன்று விக்டோரியாவின் சூப்பர் மார்க்கெட் திறக்கும் நேரங்கள் இதோ

ஆஸ்திரேலியா தினத்தன்று விக்டோரியா மாநிலம் முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சேவை நிலையங்கள் திறக்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை ஜனவரி 26 ஆம்...

சாலை விபத்துகளால் இறக்கும் ஆஸ்திரேலிய குழந்தைகள் பற்றி வெளியான தகவல்

2023 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துகளால் உயிரிழந்த இளம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. AAMI இன் சமீபத்திய தரவு அறிக்கைகள் 2023...