Newsஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

-

சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (08) முன்மொழிவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, போராட்டத்தின் உண்மையான மக்களின் எதிர்பார்ப்பை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான அம்சங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை தொடர்பில் தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையில் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளுடன் மாத்திரமே இன்னும் கலந்துரையாடல்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கும் NSW

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறுவதற்கு முன்னர் தளர்வான முறை நீக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 16 வெளிநாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்கள் தங்கள்...

தேசிய கீதம் தொடர்பாக வடகிழக்கு மாநிலப் பள்ளிகளுக்கான புதிய சட்டம்

வடக்குப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பொதுப் பள்ளிகளும் கூட்டங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் ஆஸ்திரேலிய தேசிய கீதத்தைப் பாடுவதை கட்டாயமாக்கும் புதிய அரசாங்கக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. CLP...

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிரபலமான இசை விழாவில் மாத்திரை பரிசோதனை

ஆஸ்திரேலியாவில் பிரபலமான இசை விழாவான Laneway விழாவில் முதல் முறையாக மாத்திரை பரிசோதனை (Pill Testing) வசதிகளை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு...

குயின்ஸ்லாந்தில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத மின்-பைக்குகள் பறிமுதல்

மானிய விலையில் மின்-பைக்குகள் மற்றும் மின்-ஸ்கூட்டர்களை மக்களுக்கு வழங்குவதற்காக குயின்ஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக உள் தணிக்கையில் தெரியவந்துள்ளது. மணிக்கு...

குயின்ஸ்லாந்தில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத மின்-பைக்குகள் பறிமுதல்

மானிய விலையில் மின்-பைக்குகள் மற்றும் மின்-ஸ்கூட்டர்களை மக்களுக்கு வழங்குவதற்காக குயின்ஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளதாக உள் தணிக்கையில் தெரியவந்துள்ளது. மணிக்கு...

சிட்னியின் மேற்கில் கத்திக்குத்து – ஆணும் பெண்ணும் காயம்

சிட்னியின் மேற்கில் இரவு முழுவதும் நடந்த வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்டுள்ளார் , மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார். நேற்று இரவு 10...