Newsஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

-

சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (08) முன்மொழிவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, போராட்டத்தின் உண்மையான மக்களின் எதிர்பார்ப்பை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான அம்சங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை தொடர்பில் தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையில் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளுடன் மாத்திரமே இன்னும் கலந்துரையாடல்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

Paracetamol பற்றி டிரம்ப் கூறிய பொய்யான தகவல்கள்

பொதுவான வலி நிவாரணி பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர். அமெரிக்காவில் Tylenol என்ற பிராண்ட் பெயராலும் ஆஸ்திரேலியாவில் Paracetamol என்ற பிராண்ட்...

மீண்டும் பரிசீலனையில் உள்ள கூர்மையான ஆயுதச் சட்டங்கள்

கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெர்த்தில் ஒரு விருந்தில் இளைஞர்கள் குழுவிற்கு இடையே...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...

விக்டோரியா மாநிலத்தில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, விக்டோரியா தற்போது கடுமையான குற்ற அலையின் மத்தியில் உள்ளது. மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிக அதிகமாக...

பெர்த்தில் உள்ள சீன உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பெர்த்தில் உள்ள ஒரு பிரபலமான சீன உணவகத்தின் சமையலறையில் எரிந்து கொண்டிருந்த எரிவாயு அடுப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முந்தைய நாள் உணவகம் மூடப்பட்டபோது, ​​எதிர்பாராத விதமாக...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...