Newsஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி ரணிலின் விசேட அறிவிப்பு

-

சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (08) முன்மொழிவுகள் வழங்கப்படும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, போராட்டத்தின் உண்மையான மக்களின் எதிர்பார்ப்பை வென்றெடுப்பதற்கு, அதன் மோசமான அம்சங்களைக் களைந்து, நல்ல இலக்குகளுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை தொடர்பில் தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்ட மக்கள் பேரவையில் நேற்று (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது மற்றும் நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில கட்சிகளுடன் மாத்திரமே இன்னும் கலந்துரையாடல்கள் உள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...