Newsஇலங்கை மக்களை நெகிழ வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள்!

இலங்கை மக்களை நெகிழ வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள்!

-

ஆஸ்திரேலிய கிரிக்கட் அணி வீரர்கள் இலங்கை மக்களுக்காக மிகப்பெரிய உதவிகளை செய்துள்ளனர்.

அணித்தலைவர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இலங்கை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், அண்மையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பரிசுத் தொகை ஒன்றை வென்றனர்.

இந்த நிலையில் அந்த தொகையை முழுமையாக இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

நாட்டின் மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணித்தலைவர்களான பெட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோரின் தலைமையில் 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை அவர்கள் UNICEF ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் நன்கொடையாக வழங்கும் நிதியானது, தேவையிலுள்ள 1.7 மில்லியன் இலங்கைக் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி மற்றும் மனநலச் சேவைகளை ஆதரிப்பதற்கான UNICEF இன் திட்டங்களுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...