Newsஇத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு -...

இத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு – 50 பேர் மாயம்

-

துருக்கியிலிருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகொன்று கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.

ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவுப் பகுதியில் படகு மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரைக் காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கடற்பகுதியில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது. ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புத் தேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டுக்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்து 108 பேர் மீட்கப்பட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய குடியுரிமை தேர்வில் தேர்ச்சி பெற தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்

ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்பும் புலம்பெயர்ந்தோர் பல தேர்வு வினாத்தாளுக்கு பதிலளிக்க வேண்டும். சமீபகாலமாக இந்த முறை நடைமுறையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற...

வெளியாகிய ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் வருமான தரவு அறிக்கை

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் வருமானம் தொடர்பான தகவல்கள் அடங்கிய தரவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Oxfam-இன் "Takers Not Makers" அறிக்கை மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில்,...

விக்டோரியாவிலும் பரவிவரும் தக்காளியை அழிக்கும் வைரஸ்

தெற்கு ஆஸ்திரேலியாவில் தக்காளித் தொழிலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு தாவர வைரஸ் விக்டோரியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. Goulburn பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு கிரீன்ஹவுஸில் Tomato...

Australia Day அன்று விக்டோரியாவின் சூப்பர் மார்க்கெட் திறக்கும் நேரங்கள் இதோ

ஆஸ்திரேலியா தினத்தன்று விக்டோரியா மாநிலம் முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சேவை நிலையங்கள் திறக்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை ஜனவரி 26 ஆம்...

Australia Day அன்று விக்டோரியாவின் சூப்பர் மார்க்கெட் திறக்கும் நேரங்கள் இதோ

ஆஸ்திரேலியா தினத்தன்று விக்டோரியா மாநிலம் முழுவதும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சேவை நிலையங்கள் திறக்கும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த முறை ஜனவரி 26 ஆம்...

சாலை விபத்துகளால் இறக்கும் ஆஸ்திரேலிய குழந்தைகள் பற்றி வெளியான தகவல்

2023 உடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் சாலை விபத்துகளால் உயிரிழந்த இளம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. AAMI இன் சமீபத்திய தரவு அறிக்கைகள் 2023...