Newsஇத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு -...

இத்தாலி நோக்கி சென்ற நிலையில் கடலில் மூழ்கிய அகதிகள் படகு – 50 பேர் மாயம்

-

துருக்கியிலிருந்து இத்தாலி நோக்கி அகதிகள் சென்ற படகொன்று கிரீஸ் கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது.

ஏஜியன் கடலில் கார்பதோஸ் தீவுப் பகுதியில் படகு மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் விமானப்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

படகில் சுமார் 80 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 29 பேர் மீட்கப்பட்டதாகவும், 50 பேரைக் காணவில்லை என்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் கடற்பகுதியில் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது. ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிழைப்புத் தேடி ஏராளமான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்கின்றனர். அவர்களில பலர் கிரீஸ் நாட்டையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் துருக்கி வழியாக கிரீஸ் நாட்டுக்கு, ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் 64 பேர், படகு விபத்தில் இறந்திருப்பதாக சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் மைகோனோஸ் தீவில் கடந்த ஜூன் மாதம் படகு கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்து 108 பேர் மீட்கப்பட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறியுள்ளது.

Latest news

படிக்க வந்த சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியா பற்றி சொன்ன கதை

சிறந்த வேலை, வாழ்க்கை சமநிலை மற்றும் சிறந்த தொழில் வாய்ப்புகள் காரணமாக ஆசியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படிப்பதற்காக வருவது தெரியவந்துள்ளது. சர்வதேச மாணவர்கள் ஆஸ்திரேலியாவின்...

ஈஸ்டர் விடுமுறை வார இறுதியில் பயணம் செய்ய திட்டமிடுபவர்களுக்கான ஆலோசனை

ஈஸ்டர் விடுமுறை வார இறுதி நாட்கள் தொடங்குவதால், ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் இந்த ஆண்டின் பரபரப்பான நாளாக இன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈஸ்டர் விடுமுறை வார...

டெல்லி கேபிட்டல்ஸை சம்பவம் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் – IPL 2024

IPL 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தெரிவு...

ஆஸ்திரேலியாவில் அமுலாகவுள்ள கருக்கலைப்பு சட்டங்கள்!

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய கருக்கலைப்பு சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டங்கள் வெளியிடப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தப் புதிய சட்டங்கள் அமலுக்கு வந்திருப்பது சிறப்பு. முன்கூட்டிய...

ஆஸ்திரேலியா முழுவதும் அதிகரித்து வரும் ஒரு நோய் பரவல்

அவுஸ்திரேலியா முழுவதும் இன்ஃப்ளூயன்ஸாவின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன. இந்த ஆண்டு நியூ சவுத் வேல்ஸில் மட்டும் இன்ஃப்ளூயன்ஸா ஏ மற்றும் பி...

தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தத்தெடுப்பின் மூலம் சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை தாய்லாந்து எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே...