Newsஇலங்கையில் டொலர் தட்டுப்பாடு - 2500 பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

இலங்கையில் டொலர் தட்டுப்பாடு – 2500 பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு

-

நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது..

எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களின் இறக்குமதியும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பட்டியலில் 2500க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Latest news

Asbestos அச்சத்தால் திரும்பப் பெறப்பட்ட பிரபலமான குழந்தைகள் பொம்மை தயாரிப்பு

குழந்தைகள் விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் மற்றொரு வண்ணமயமான மணல் தயாரிப்பு, Asbestos கவலைகள் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பொருளான Kadink Decorative Sand 10 கிராம் Six-pack,...

ஆஸ்திரேலியர்களை மீண்டும் எச்சரிக்கும் காமன்வெல்த் வங்கி

காமன்வெல்த் வங்கி ஆஸ்திரேலியர்களுக்கு மற்றொரு பயங்கரமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறைந்த பொருளாதார வளர்ச்சி ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்களில் சரிவுக்கு வழிவகுக்கும் என்று இது பொருள் கொள்ளப்பட்டுள்ளதாக...

ஆஸ்திரேலிய தேவாலயத்திற்கு தீ வைத்த நபர் – $75,000 சேதம்

ஆஸ்திரேலியாவின் Ballarat-இல் உள்ள Cathedral of Christ the King உள்ள பலிபீடத்திற்கு (Altar) தீ வைத்ததாக விக்டோரியன் நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீ...

ஆஸ்திரேலியாவில் மூடப்பட்ட உணவு விநியோக நிறுவனம் – 10,000 பேர் ஆபத்தில்

ஆஸ்திரேலிய உணவு விநியோக நிறுவனமான Menulog நவம்பர் மாத இறுதியில் மூடப்படும் என்று கூறப்படுகிறது. 10,000 ஆஸ்திரேலியர்கள் வரை தங்கள் வருமானத்தை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலிய தேவாலயத்திற்கு தீ வைத்த நபர் – $75,000 சேதம்

ஆஸ்திரேலியாவின் Ballarat-இல் உள்ள Cathedral of Christ the King உள்ள பலிபீடத்திற்கு (Altar) தீ வைத்ததாக விக்டோரியன் நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தீ...

ஆஸ்திரேலியாவில் மூடப்பட்ட உணவு விநியோக நிறுவனம் – 10,000 பேர் ஆபத்தில்

ஆஸ்திரேலிய உணவு விநியோக நிறுவனமான Menulog நவம்பர் மாத இறுதியில் மூடப்படும் என்று கூறப்படுகிறது. 10,000 ஆஸ்திரேலியர்கள் வரை தங்கள் வருமானத்தை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய...