Newsஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்க, ஆண்டுதோறும் வழங்கப்படும் திறன்மிக்க புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையில் மேலும் 40,000 அதிகரிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனால் தற்போது சராசரியாக 160,000 வீசாக்கள் வழங்கப்படுவது இனி 2 லட்சமாக உயரும் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான யோசனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொவிட் நிலைமை காரணமாக 02 வருடங்களாக எல்லை மூடப்பட்டுள்ளமையினால், ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிலிருந்து வராத காரணத்தினால் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, தற்போது நாட்டில் பல்வேறு துறைகளில் சுமார் 480,100 வெற்றிடங்கள் உள்ளன.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெற்றிடங்களின் வீதம் 111 சதவீதம் அதிகமாகும்.

ஊழியர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக, 66 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களை 06 மாத காலத்திற்கு மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் குழந்தைகளை குழந்தை பராமரிப்புக்கு அனுப்புவதன் மூலம் தாய்மார்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிக சலுகைகளை வழங்குவது மற்றொரு யோசனையாகும்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...