Newsஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்க, ஆண்டுதோறும் வழங்கப்படும் திறன்மிக்க புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையில் மேலும் 40,000 அதிகரிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனால் தற்போது சராசரியாக 160,000 வீசாக்கள் வழங்கப்படுவது இனி 2 லட்சமாக உயரும் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான யோசனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொவிட் நிலைமை காரணமாக 02 வருடங்களாக எல்லை மூடப்பட்டுள்ளமையினால், ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிலிருந்து வராத காரணத்தினால் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, தற்போது நாட்டில் பல்வேறு துறைகளில் சுமார் 480,100 வெற்றிடங்கள் உள்ளன.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெற்றிடங்களின் வீதம் 111 சதவீதம் அதிகமாகும்.

ஊழியர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக, 66 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களை 06 மாத காலத்திற்கு மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் குழந்தைகளை குழந்தை பராமரிப்புக்கு அனுப்புவதன் மூலம் தாய்மார்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிக சலுகைகளை வழங்குவது மற்றொரு யோசனையாகும்.

Latest news

ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு – மூவர் பலி!

ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டின்...

பிரிட்டனின் புதிய பாஸ்போர்ட் விதிகள் – இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிக்கல்கள்

பிரிட்டிஷ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கடவுச்சீட்டு விதிகள் காரணமாக பிரிட்டன் மற்றும் பிற நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் பெரும் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் இருந்து திரும்ப பெறப்பட்ட குழந்தைகள் பொம்மை

Aldi கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான சீட்டாட்டம் ஒன்று உடனடியாக திரும்பப் பெறப்பட்டது. ஏனெனில் அது குழந்தைகளுக்கு கடுமையான காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது. "Orchard...

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு Centrelink கட்டணங்களில் மாற்றங்கள்

ஜனவரி 26 ஆம் திகதி ஆஸ்திரேலிய தின பொது விடுமுறை காரணமாக அனைத்து சேவைகள் ஆஸ்திரேலியா மற்றும் Centrelink சேவை மையங்களும் மூடப்பட திட்டமிடப்பட்டுள்ளன. இது Centrelink...

ஆஸ்திரேலிய தினத்தன்று பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டதாக PhD மாணவர் மீது குற்றம்

ஆஸ்திரேலிய தின நிகழ்வில் Molotov cocktail தாக்குதலை நடத்த திட்டமிட்டதாக 24 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கோல்ட் கோஸ்ட் பகுதியில் திங்கட்கிழமை ஒரு...