Newsஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்க, ஆண்டுதோறும் வழங்கப்படும் திறன்மிக்க புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையில் மேலும் 40,000 அதிகரிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனால் தற்போது சராசரியாக 160,000 வீசாக்கள் வழங்கப்படுவது இனி 2 லட்சமாக உயரும் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான யோசனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொவிட் நிலைமை காரணமாக 02 வருடங்களாக எல்லை மூடப்பட்டுள்ளமையினால், ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிலிருந்து வராத காரணத்தினால் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, தற்போது நாட்டில் பல்வேறு துறைகளில் சுமார் 480,100 வெற்றிடங்கள் உள்ளன.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெற்றிடங்களின் வீதம் 111 சதவீதம் அதிகமாகும்.

ஊழியர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக, 66 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களை 06 மாத காலத்திற்கு மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் குழந்தைகளை குழந்தை பராமரிப்புக்கு அனுப்புவதன் மூலம் தாய்மார்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிக சலுகைகளை வழங்குவது மற்றொரு யோசனையாகும்.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...