Newsஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்க, ஆண்டுதோறும் வழங்கப்படும் திறன்மிக்க புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையில் மேலும் 40,000 அதிகரிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனால் தற்போது சராசரியாக 160,000 வீசாக்கள் வழங்கப்படுவது இனி 2 லட்சமாக உயரும் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான யோசனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொவிட் நிலைமை காரணமாக 02 வருடங்களாக எல்லை மூடப்பட்டுள்ளமையினால், ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிலிருந்து வராத காரணத்தினால் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, தற்போது நாட்டில் பல்வேறு துறைகளில் சுமார் 480,100 வெற்றிடங்கள் உள்ளன.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெற்றிடங்களின் வீதம் 111 சதவீதம் அதிகமாகும்.

ஊழியர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக, 66 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களை 06 மாத காலத்திற்கு மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் குழந்தைகளை குழந்தை பராமரிப்புக்கு அனுப்புவதன் மூலம் தாய்மார்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிக சலுகைகளை வழங்குவது மற்றொரு யோசனையாகும்.

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...