Newsஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

-

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்க, ஆண்டுதோறும் வழங்கப்படும் திறன்மிக்க புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையில் மேலும் 40,000 அதிகரிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனால் தற்போது சராசரியாக 160,000 வீசாக்கள் வழங்கப்படுவது இனி 2 லட்சமாக உயரும் என குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பான யோசனை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய அரசின் வரவு செலவு திட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கொவிட் நிலைமை காரணமாக 02 வருடங்களாக எல்லை மூடப்பட்டுள்ளமையினால், ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பணியாளர்கள் நாட்டிலிருந்து வராத காரணத்தினால் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் அறிக்கையின்படி, தற்போது நாட்டில் பல்வேறு துறைகளில் சுமார் 480,100 வெற்றிடங்கள் உள்ளன.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெற்றிடங்களின் வீதம் 111 சதவீதம் அதிகமாகும்.

ஊழியர் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக, 66 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களை 06 மாத காலத்திற்கு மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கள் குழந்தைகளை குழந்தை பராமரிப்புக்கு அனுப்புவதன் மூலம் தாய்மார்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிக சலுகைகளை வழங்குவது மற்றொரு யோசனையாகும்.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...