Newsசீன கப்பல் விவகாரம்?

சீன கப்பல் விவகாரம்?

-

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல், நாளைய தினம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவின் கரிசனைகளை தொடர்ந்தே, குறித்த கப்பல், இந்திய சுதந்திரதினத்திற்கு பின்பாக வரவுள்ளது. இதனை இந்தியாவினால் தடுத்து நிறுத்த முடியவில்லை – ஏனென்றால், இந்தியாவிற்கு முதுகெலும்பில்லை என்றவாறான, தமிழ் குரல்களை காண முடிகின்றது. சர்வதேச அரசியல் விவகாரங்களில் முதுகெலும்மை தேடும் அரசியல் (நமது) ஆய்வாளர்கள் என்போரின் பரிதாப நிலையை என்னவென்பது?

முதுகெலும்பு என்னும் கதையாடல்கள் சாதாரண பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். ராஜதந்திர விடயங்களில் முதுகெலும்பு என்று ஒன்றில்லை. தந்திரம் மட்டுமே அங்குண்டு. அண்மையில் அமெரிக்க சபாநாயகர், திட்டமிட்டவாறு, தாய்வானுக்கு சென்று, அங்கு சந்திப்புக்களில் ஈடுபட்டார். தாய்வானை தன்னுடைய பகுதியென்று சத்தமிட்டுவரும் சீனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியானால் சீனாவிற்கு முதுகெலும்பில்லை எனலாமா? மற்றவர்களின் முதுகெலும்மை தேடுவதைவிட்டுவிட்டு, நமது பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் – ஏன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு தோல்வி மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றது, என்று சிந்திப்பதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் தலையீட்டை தொடர்ந்துதான் குறித்த கப்பல் குறித்த திகதியில் துறைமுகத்திற்கு வரவில்லை. கடந்த 11ம் திகதி இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பிற்போடுமாறு, கொழுப்பு, சீனாவை அறிவுறுத்தியிருந்தது. குறித்த கப்பலுக்கு முன் கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இதனை தடுப்பது கொழும்பிற்கு முடியாத காரியமாகிவிட்டது. ஆனாலும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே தற்போது திகதி பிற்போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையுணர்வின் அடிப்படையில் புதுடில்லி சில விடயங்களை வலியுறுத்துவதும், தேவைப்பட்டால் தலையீடு செய்வதும் சாதாரணமானது. ஆனால் தலையிடுவதற்கான எல்லைக் கோடானது, நமது சில தமிழர்கள் எதிர்பார்ப்பது போன்று இருக்காது. ஏனெனில் இது யுத்தமல்ல. ஒரு அமைதியான சூழலில் இடம்பெறும் இது போன்ற விடயங்களை ராஜதந்திர ரீதியில்தான் அணுக முடியும். மேலும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களை பொறுத்தவரையில், அவர்கள் அதிகம் இந்தியாவிற்கும் இலங்கைத் தீவுக்குமான புவியியல்-அருகாமை (Geographic proximity) தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

பாரியளவில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தால், எவ்வேளையிலும் இலங்கைத் தீவை தங்களின் இராணுவ வளையத்திற்குள் கொண்டுவரமுடியும் – என்னும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாகவே அதிகம் பதட்டமடையாமல் இருக்கின்றனர். நான் ஒரு முறை, இந்திய கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற கொமடோர் வாசனை நேர்காணல் செய்திருந்தேன்.

அவர் கூறியது, இராணுவ நிலையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய நிலையிலேயே இந்தியா இருக்கின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா அனுபவிக்கின்ற பூகோள அமைவிட அனுகூலங்களே இதற்கான காரணமாகும். இந்திய ஆயுதக்களஞ்சியத்தில் இருக்கின்ற சகல ஏவுகணைகளும் தாக்கக் கூடிய தொலைவிலேயே அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கின்றது. இந்த நேர்காணலை எமது சிந்தனைக் கூட தளத்தில் நீங்கள் காணலாம்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...