Newsசீன கப்பல் விவகாரம்?

சீன கப்பல் விவகாரம்?

-

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல், நாளைய தினம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவின் கரிசனைகளை தொடர்ந்தே, குறித்த கப்பல், இந்திய சுதந்திரதினத்திற்கு பின்பாக வரவுள்ளது. இதனை இந்தியாவினால் தடுத்து நிறுத்த முடியவில்லை – ஏனென்றால், இந்தியாவிற்கு முதுகெலும்பில்லை என்றவாறான, தமிழ் குரல்களை காண முடிகின்றது. சர்வதேச அரசியல் விவகாரங்களில் முதுகெலும்மை தேடும் அரசியல் (நமது) ஆய்வாளர்கள் என்போரின் பரிதாப நிலையை என்னவென்பது?

முதுகெலும்பு என்னும் கதையாடல்கள் சாதாரண பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். ராஜதந்திர விடயங்களில் முதுகெலும்பு என்று ஒன்றில்லை. தந்திரம் மட்டுமே அங்குண்டு. அண்மையில் அமெரிக்க சபாநாயகர், திட்டமிட்டவாறு, தாய்வானுக்கு சென்று, அங்கு சந்திப்புக்களில் ஈடுபட்டார். தாய்வானை தன்னுடைய பகுதியென்று சத்தமிட்டுவரும் சீனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியானால் சீனாவிற்கு முதுகெலும்பில்லை எனலாமா? மற்றவர்களின் முதுகெலும்மை தேடுவதைவிட்டுவிட்டு, நமது பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் – ஏன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு தோல்வி மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றது, என்று சிந்திப்பதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் தலையீட்டை தொடர்ந்துதான் குறித்த கப்பல் குறித்த திகதியில் துறைமுகத்திற்கு வரவில்லை. கடந்த 11ம் திகதி இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பிற்போடுமாறு, கொழுப்பு, சீனாவை அறிவுறுத்தியிருந்தது. குறித்த கப்பலுக்கு முன் கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இதனை தடுப்பது கொழும்பிற்கு முடியாத காரியமாகிவிட்டது. ஆனாலும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே தற்போது திகதி பிற்போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையுணர்வின் அடிப்படையில் புதுடில்லி சில விடயங்களை வலியுறுத்துவதும், தேவைப்பட்டால் தலையீடு செய்வதும் சாதாரணமானது. ஆனால் தலையிடுவதற்கான எல்லைக் கோடானது, நமது சில தமிழர்கள் எதிர்பார்ப்பது போன்று இருக்காது. ஏனெனில் இது யுத்தமல்ல. ஒரு அமைதியான சூழலில் இடம்பெறும் இது போன்ற விடயங்களை ராஜதந்திர ரீதியில்தான் அணுக முடியும். மேலும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களை பொறுத்தவரையில், அவர்கள் அதிகம் இந்தியாவிற்கும் இலங்கைத் தீவுக்குமான புவியியல்-அருகாமை (Geographic proximity) தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

பாரியளவில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தால், எவ்வேளையிலும் இலங்கைத் தீவை தங்களின் இராணுவ வளையத்திற்குள் கொண்டுவரமுடியும் – என்னும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாகவே அதிகம் பதட்டமடையாமல் இருக்கின்றனர். நான் ஒரு முறை, இந்திய கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற கொமடோர் வாசனை நேர்காணல் செய்திருந்தேன்.

அவர் கூறியது, இராணுவ நிலையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய நிலையிலேயே இந்தியா இருக்கின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா அனுபவிக்கின்ற பூகோள அமைவிட அனுகூலங்களே இதற்கான காரணமாகும். இந்திய ஆயுதக்களஞ்சியத்தில் இருக்கின்ற சகல ஏவுகணைகளும் தாக்கக் கூடிய தொலைவிலேயே அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கின்றது. இந்த நேர்காணலை எமது சிந்தனைக் கூட தளத்தில் நீங்கள் காணலாம்.

Latest news

போராட்டங்களின் போது Capsicum spray தெளிப்பது சட்டவிரோதம் – நீதிமன்ற தீர்ப்பு

அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் Capsicum spray பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்று கூறி உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு...

பாலியில் போக்குவரத்து விதிகளை மீறிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம்

சர்ச்சைக்குரிய பிரிட்டிஷ் ஆபாச நட்சத்திரம் Tia Billinger, போக்குவரத்து விதிமீறலுக்காக பாலி நீதிமன்றத்தில் ஆஜரானார். Bonnie Blue என்றும் அழைக்கப்படும் அவர், "Bang Bus" என்று பெயரிடப்பட்ட...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் அதிகரித்துள்ள நீரில் மூழ்கும் நபர்களின் எண்ணிக்கை

கடந்த ஆண்டை விட நீரில் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, Surf Life Saving Queensland (SLSQ) மாநிலத்தின் கடற்கரைகள் முழுவதும் ரோந்து நேரத்தை...

வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்திய Bupa – விதிக்கப்பட்ட அபராதம்

ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுகாதார காப்பீட்டு வழங்குநரான Bupa, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் சட்டத்தை மீறி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக,...

கிறிஸ்துமஸ் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள் – மருத்துவர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனை (RCH) மருத்துவர்கள், கிறிஸ்துமஸ் பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கும்போது குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர். காந்தங்கள் மற்றும் பொத்தான் பேட்டரிகள்...