Newsசீன கப்பல் விவகாரம்?

சீன கப்பல் விவகாரம்?

-

சீனாவின் யுவான் வாங் -5 கப்பல், நாளைய தினம், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. இந்தியாவின் கரிசனைகளை தொடர்ந்தே, குறித்த கப்பல், இந்திய சுதந்திரதினத்திற்கு பின்பாக வரவுள்ளது. இதனை இந்தியாவினால் தடுத்து நிறுத்த முடியவில்லை – ஏனென்றால், இந்தியாவிற்கு முதுகெலும்பில்லை என்றவாறான, தமிழ் குரல்களை காண முடிகின்றது. சர்வதேச அரசியல் விவகாரங்களில் முதுகெலும்மை தேடும் அரசியல் (நமது) ஆய்வாளர்கள் என்போரின் பரிதாப நிலையை என்னவென்பது?

முதுகெலும்பு என்னும் கதையாடல்கள் சாதாரண பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். ராஜதந்திர விடயங்களில் முதுகெலும்பு என்று ஒன்றில்லை. தந்திரம் மட்டுமே அங்குண்டு. அண்மையில் அமெரிக்க சபாநாயகர், திட்டமிட்டவாறு, தாய்வானுக்கு சென்று, அங்கு சந்திப்புக்களில் ஈடுபட்டார். தாய்வானை தன்னுடைய பகுதியென்று சத்தமிட்டுவரும் சீனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படியானால் சீனாவிற்கு முதுகெலும்பில்லை எனலாமா? மற்றவர்களின் முதுகெலும்மை தேடுவதைவிட்டுவிட்டு, நமது பிரச்சினைகளை எவ்வாறு கையாளலாம் – ஏன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு தோல்வி மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கின்றது, என்று சிந்திப்பதுதான் நமது வேலையாக இருக்க வேண்டும்.

இந்தியாவின் தலையீட்டை தொடர்ந்துதான் குறித்த கப்பல் குறித்த திகதியில் துறைமுகத்திற்கு வரவில்லை. கடந்த 11ம் திகதி இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை பிற்போடுமாறு, கொழுப்பு, சீனாவை அறிவுறுத்தியிருந்தது. குறித்த கப்பலுக்கு முன் கூட்டியே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், இதனை தடுப்பது கொழும்பிற்கு முடியாத காரியமாகிவிட்டது. ஆனாலும் இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே தற்போது திகதி பிற்போடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையுணர்வின் அடிப்படையில் புதுடில்லி சில விடயங்களை வலியுறுத்துவதும், தேவைப்பட்டால் தலையீடு செய்வதும் சாதாரணமானது. ஆனால் தலையிடுவதற்கான எல்லைக் கோடானது, நமது சில தமிழர்கள் எதிர்பார்ப்பது போன்று இருக்காது. ஏனெனில் இது யுத்தமல்ல. ஒரு அமைதியான சூழலில் இடம்பெறும் இது போன்ற விடயங்களை ராஜதந்திர ரீதியில்தான் அணுக முடியும். மேலும் இந்திய பாதுகாப்பு நிபுணர்களை பொறுத்தவரையில், அவர்கள் அதிகம் இந்தியாவிற்கும் இலங்கைத் தீவுக்குமான புவியியல்-அருகாமை (Geographic proximity) தொடர்பிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

பாரியளவில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தால், எவ்வேளையிலும் இலங்கைத் தீவை தங்களின் இராணுவ வளையத்திற்குள் கொண்டுவரமுடியும் – என்னும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இதன் காரணமாகவே அதிகம் பதட்டமடையாமல் இருக்கின்றனர். நான் ஒரு முறை, இந்திய கடற்படையிலிருந்து ஓய்வுபெற்ற கொமடோர் வாசனை நேர்காணல் செய்திருந்தேன்.

அவர் கூறியது, இராணுவ நிலையில் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய நிலையிலேயே இந்தியா இருக்கின்றது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியா அனுபவிக்கின்ற பூகோள அமைவிட அனுகூலங்களே இதற்கான காரணமாகும். இந்திய ஆயுதக்களஞ்சியத்தில் இருக்கின்ற சகல ஏவுகணைகளும் தாக்கக் கூடிய தொலைவிலேயே அம்பாந்தோட்டை துறைமுகம் இருக்கின்றது. இந்த நேர்காணலை எமது சிந்தனைக் கூட தளத்தில் நீங்கள் காணலாம்.

Latest news

டிரம்பின் கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக உள்ள சர்வதேச மாணவர் கட்டுப்பாடுகள்

சர்வதேச மாணவர்கள் மீதான ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாடுகள் அமெரிக்க கட்டணங்களை விட பெரிய பிரச்சனையாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் வரிகள் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் Deepfake Photo செயலிகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பள்ளிகளுக்கு Nudify செயலிகள் குறித்து அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18 மாதங்களில் Deepfake படங்கள் பற்றிய அறிக்கைகள் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளதாக...

ஆஸ்திரேலிய பணியிடங்களில் அதிகரித்துள்ள சுய பரிசோதனை மருந்து கருவிகளுக்கான தேவை

ஆஸ்திரேலிய பணியிடங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், தனிப்பட்ட போதைப்பொருள் சுய பரிசோதனை கருவிகளுக்கான தேவை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி, cocaine,...

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலை சிங்கத்தால் கையை இழந்த பெண்

குயின்ஸ்லாந்து மிருகக்காட்சிசாலையில் சிங்கம் தாக்கியதில் 50 வயது பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் Toowoomba-இற்கு அருகிலுள்ள பிரபலமான...

பிரபல சமையல் கலை நிபுணர் Peter Russell-Clarke காலமானார்

அன்புடன் சமைக்கும் கலையைக் கற்றுக் கொடுத்த பிரபல சமையல் கலை நிபுணர் Peter Russell-Clarke காலமானார். அவர் இறக்கும் போது 89 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. Peter Russell-Clarke...

சிறப்பு உணவுகளின் விலைகளை உயர்த்தும் இரு பெரிய பல்பொருள் அங்காடிகள்

Coles மற்றும் Woolworths-இல் விற்கப்படும் பிரபலமான பிரதான உணவான paprikaவின் விலை அதிகரிக்கப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி, எதிர்காலத்தில் மிளகுத்தூளின் மொத்த விலை சுமார்...