Newsஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சர்ச்சைக்குரிய சீன கப்பல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சர்ச்சைக்குரிய சீன கப்பல்

-

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பல் கடந்த 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்தது எனினும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியிருந்த நிலையில் அதன் வருகை தாமதமானது.

இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எவ்வாறாயினும், குறித்த கப்பல் சீனாவிலிருந்து, பயணத்தை ஆரம்பித்து 24 நாட்களின் பின்னரே, அதாவது இலங்கையை வந்தடைவதற்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெதரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 11 ஆம் திகதி வரவிருந்த குறித்த கப்பலின் வருகை தாமதமானது. எவ்வாறாயினும், குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கடந்த 13 ஆம் திகதி அனுமதி வழங்கியது.

தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக குறித்த கப்பல் நாட்டிற்கு பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது.

சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற கப்பல் அந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வகைக் கப்பலின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தது.

இந்த வகையான ஏழு கப்பல்களை சீனா கொண்டிருக்கின்றது. இந்தக் கப்பலானது, சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டப்பட்டு 2007 செப்டெம்பரில் சேவையில் இணைக்கப்பட்டது.

இந்த கப்பலை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் உத்தி ஆதரவுப் படை ஆகியன கூட்டிணைந்து இயக்குகின்றன.

இந்தவகைக் கப்பல்களை செயற்கைக்கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுதல், தகவல்தொடர்பாடல், மின்னணு வலையமைப்பு ஆகிய செயற்பாடுகளை கண்காணிக்கப் பயன்படுத்துகிறது.

இறுதியாக, ‘யுவான் வாங் 5’ கப்பலானது, சீனாவின் ‘லாங் மார்ச் 5பி’ ஏவுகணை விண்வெளிக்கு ஏவப்பட்டபோது ஆய்வகத்தொகுதி மற்றும் கடற்பரப்பினைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

வேலை இழக்கும் நூற்றுக்கணக்கான AGL Energy ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றான AGL Energy, அதன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு, நவீனமயமாக்கி, எரிசக்தி திட்டங்களுக்கு மாறத் தயாராகி வருகிறது. இதன்...

NSW ரயில்களில் மின்-சைக்கிள்களை எடுத்துச் செல்ல அபராதம்

நியூ சவுத் வேல்ஸ் ரயில் வலையமைப்பில் (சிட்னி ரயில்கள், NSW ரயில் இணைப்பு, மெட்ரோ) மாற்றப்பட்ட மின்-பைக்குகளின் பயன்பாடு இன்று முதல் முற்றிலும் தடைசெய்யப்படும் . இந்தச்...

பெண்களின் சம்பளம் பற்றி வெளியான புதிய அறிக்கை

பெண்களின் ஊதிய இடைவெளி அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபடும் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. Workplace Gender Equality Agency (WGEA) வெளியிட்டுள்ள அறிக்கை, 15...

ஆஸ்திரேலியர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் Medicare-இற்காக $7.9 பில்லியன் Bulk Billing சீர்திருத்தம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், Medicare அட்டை உள்ள...

ஆஸ்திரேலியர்களுக்கு விஷயங்களை எளிதாக்கும் ஒரு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

ஆஸ்திரேலியாவின் சுகாதார அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் Medicare-இற்காக $7.9 பில்லியன் Bulk Billing சீர்திருத்தம் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், Medicare அட்டை உள்ள...

இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மோனாஷ் பல்கலைக்கழகம்

RP-Sanjiv Goenka குழுமத்தின் ஒரு பகுதியான மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும்  Firstsource Solutions Limited ஆகியவை புதிய செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் மற்றும் முன்னேற்றங்களை உருவாக்குவதற்கான...