Newsஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சர்ச்சைக்குரிய சீன கப்பல்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சர்ச்சைக்குரிய சீன கப்பல்

-

பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை 7.50 அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பல் கடந்த 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவிருந்தது எனினும், தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி இந்தியா கடுமையான கவலைகளை எழுப்பியிருந்த நிலையில் அதன் வருகை தாமதமானது.

இந்த விவகாரம் குறித்து மேலும் ஆலோசனைகள் நடத்தப்படும் வரை பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எவ்வாறாயினும், குறித்த கப்பல் சீனாவிலிருந்து, பயணத்தை ஆரம்பித்து 24 நாட்களின் பின்னரே, அதாவது இலங்கையை வந்தடைவதற்கு மூன்று நாட்கள் இருந்த நிலையில் கடந்த 8 ஆம் திகதியே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெதரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 11 ஆம் திகதி வரவிருந்த குறித்த கப்பலின் வருகை தாமதமானது. எவ்வாறாயினும், குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கடந்த 13 ஆம் திகதி அனுமதி வழங்கியது.

தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக குறித்த கப்பல் நாட்டிற்கு பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இன்றைய தினம் நாட்டை வந்துள்ள இந்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் நாட்டில் இருந்து வெளியேறவுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளது.

சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற கப்பல் அந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வகைக் கப்பலின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தது.

இந்த வகையான ஏழு கப்பல்களை சீனா கொண்டிருக்கின்றது. இந்தக் கப்பலானது, சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டப்பட்டு 2007 செப்டெம்பரில் சேவையில் இணைக்கப்பட்டது.

இந்த கப்பலை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் உத்தி ஆதரவுப் படை ஆகியன கூட்டிணைந்து இயக்குகின்றன.

இந்தவகைக் கப்பல்களை செயற்கைக்கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுதல், தகவல்தொடர்பாடல், மின்னணு வலையமைப்பு ஆகிய செயற்பாடுகளை கண்காணிக்கப் பயன்படுத்துகிறது.

இறுதியாக, ‘யுவான் வாங் 5’ கப்பலானது, சீனாவின் ‘லாங் மார்ச் 5பி’ ஏவுகணை விண்வெளிக்கு ஏவப்பட்டபோது ஆய்வகத்தொகுதி மற்றும் கடற்பரப்பினைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...