Breaking Newsஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சியில் பிரதமர்

ஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் – அதிர்ச்சியில் பிரதமர்

-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் தன்னைப் பல அமைச்சர்நிலைப் பதவிகளுக்கு நியமனம் செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.

இது குறித்துத் தற்போதைய பிரதமர் ஆண்டனி ஆல்பனீசி (Anthony Albanese) அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரை, மோரிசன் கூடுதலாக 5 பதவிகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

COVID-19 நோய்ப்பரவல் உச்சத்தில் இருந்தபோது அவர் சுகாதார அமைச்சை வழிநடத்தியிருந்தார்.

அண்மையில் மோரிசன் தொழில்துறை, அறிவியல், எரிசக்தி, வளங்கள் ஆகியவற்றின் அமைச்சுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

அதன் தொடர்பில் அடுத்த திங்கட்கிழமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து ஆலோசனை பெறவிருப்பதாக ஆல்பனீசி கூறினார்.

அரசியல்வாதிகள் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால் எந்தச் சீர்திருத்தங்களையும் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலப் பிரதமர்கள் ஏற்கும் புதிய பதவிகளை வெளிப்படையாக அறிவிப்பதை உறுதிசெய்வதும் அவசியம் என ஆல்பனீசி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மோரிசன் தன்னைத் தற்காத்துப் பேசியிருக்கிறார். தனது பொறுப்புகளை அம்பலப்படுத்துவது அவசியமில்லை என்று கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

சிட்னியில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல் – ஒருவர் கைது

சிட்னியின் உள் மேற்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

சட்டவிரோத புகையிலை சந்தையை சுத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர்...