Breaking Newsஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சியில் பிரதமர்

ஸ்கொட் மோரிசனின் இரகசியங்கள் அம்பலம் – அதிர்ச்சியில் பிரதமர்

-

ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் தன்னைப் பல அமைச்சர்நிலைப் பதவிகளுக்கு நியமனம் செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.

இது குறித்துத் தற்போதைய பிரதமர் ஆண்டனி ஆல்பனீசி (Anthony Albanese) அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஆண்டு மே மாதம் வரை, மோரிசன் கூடுதலாக 5 பதவிகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாகத் தெரியவந்துள்ளது.

COVID-19 நோய்ப்பரவல் உச்சத்தில் இருந்தபோது அவர் சுகாதார அமைச்சை வழிநடத்தியிருந்தார்.

அண்மையில் மோரிசன் தொழில்துறை, அறிவியல், எரிசக்தி, வளங்கள் ஆகியவற்றின் அமைச்சுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

அதன் தொடர்பில் அடுத்த திங்கட்கிழமை வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து ஆலோசனை பெறவிருப்பதாக ஆல்பனீசி கூறினார்.

அரசியல்வாதிகள் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆனால் எந்தச் சீர்திருத்தங்களையும் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலப் பிரதமர்கள் ஏற்கும் புதிய பதவிகளை வெளிப்படையாக அறிவிப்பதை உறுதிசெய்வதும் அவசியம் என ஆல்பனீசி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மோரிசன் தன்னைத் தற்காத்துப் பேசியிருக்கிறார். தனது பொறுப்புகளை அம்பலப்படுத்துவது அவசியமில்லை என்று கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள எரிமலையில் பல பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

நியூ சவுத் வேல்ஸில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 குதிரை சடலங்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட குதிரை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குதிரைகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை உலர விடுவதாக கிடைத்த தகவலின்...