Newsகோட்டாபய தாய்லாந்து செல்ல பணம் செலுத்திய இலங்கை அரசாங்கம்

கோட்டாபய தாய்லாந்து செல்ல பணம் செலுத்திய இலங்கை அரசாங்கம்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ள நிலையில் அவர் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளார்.

இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன,
“ஆம், ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கமைய, தற்போதைய ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டரீதியான சில சலுகைகள் உள்ளன.

முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மறைவுக்கு பின்னர் அவரது மனைவிக்கு அத்தகைய வரப்பிரசாதங்கள் தற்போது கிடைக்கப்பெறுவதாக அறிகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, இராஜதந்திர கட்வுச்சீட்டை கொண்டுள்ளார். அதனால் அவர் தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருக்கலாம் என்று தாய் வெளியுறவு அமைச்சர் டொன் பிரமுத்வினாய் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Invasion Day குண்டுவெடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு போலீஸ் கமிஷனர் பதில்

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின ஆர்ப்பாட்டத்தின் மீதான குண்டுவெடிப்பை கையாண்டதற்காக மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க 9...

எடை இழப்பு மருந்துகள் பற்றி எச்சரிக்கை

உணவுக் கோளாறு குழுக்கள் GLP-1 வகை எடை இழப்பு மருந்துகளின் விரைவான பிரபலம் குறித்து எச்சரிப்பதாகக் கூறப்படுகிறது. எடை இழப்பு சந்தைப்படுத்தல் வேண்டுமென்றே பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிவைப்பதாக...

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...