Newsபுலம்பெயர்ந்தோருக்காக இலங்கையில் அலுவலகம் திறக்கும் ஜனாதிபதி ரணில்!

புலம்பெயர்ந்தோருக்காக இலங்கையில் அலுவலகம் திறக்கும் ஜனாதிபதி ரணில்!

-

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், தற்போது அமுலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை இந்த வார இறுதிக்குள் நீக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடு தற்போது ஸ்திரமான நிலையில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜுலை 18ஆம் திகதி முதல், எதிர்வரும் 18ஆம் திகதிவரை அவசரகால சட்டம் ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டது.

இதற்கு, மனித உரிமைகள் ஆர்வலர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

எவ்வாறிருப்பினும், கடந்த மாதம் 27ஆம் திகதி அவசரகால சட்டம் நாடாளுமன்றில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறான பின்னணியில், கொழும்பில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று நடைபெற்ற ‘தொழில்சார் வல்லுநர் சங்கங்களின் மாநாடு – 2022’ விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, அவசரகாலச் சட்டத்தை இந்தவார இறுதிக்குள் நீக்கமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது, நாட்டைக் கட்டியெழுப்ப பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்துடனான பணிக்குழாம்மட்ட ஒப்பந்தம் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், அந்த உடன்படிக்கை இலங்கைக்கு சிறந்த நம்பிக்கையைக் கொடுக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Latest news

துப்புரவு நிறுவன உரிமையாளர் மீது $1,000 பாலியல் லஞ்சம் கேட்டதாக குற்றம்

ஆஸ்திரேலியாவின் AFL கிளப்புகள் மற்றும் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். எம்ஏ சர்வீசஸ் குழுமத்தின் உரிமையாளரான மிக்கி அஹுஜா,...

ஆஸ்திரேலிய சந்தையில் சாதனை அளவை எட்டியுள்ள ஸ்ட்ராபெரி

இந்த கோடையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடி அலமாரிகள் ஏராளமாக ஸ்ட்ராபெர்ரிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடத்தின் குளிர்ந்த மற்றும் ஈரமான வசந்த காலம்தான் இதற்குக் காரணம். தெற்கு...

வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளரை வர்ணித்த ட்ரம்ப்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற...

பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட மின் விசிறிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்பட்ட இரண்டு பெடஸ்டல் ஃபேன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன. Woolworths குழுமம் Big W-இல் இருந்து Contempo 45 செ.மீ உயர் வேக...

பாதுகாப்பு அச்சங்கள் காரணமாக திரும்ப அழைக்கப்பட்ட மின் விசிறிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் விற்கப்பட்ட இரண்டு பெடஸ்டல் ஃபேன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பப் பெறப்பட்டுள்ளன. Woolworths குழுமம் Big W-இல் இருந்து Contempo 45 செ.மீ உயர் வேக...

உலகெங்கிலும் உள்ள பணக்காரர்களுக்கு அமெரிக்க கனவை நனவாக்கும் Trump Gold Card

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அதிக அளவு பணம் செலுத்தி அமெரிக்க குடியுரிமையை விரைவாகப் பெற அனுமதிக்கும் Trump Gold Card விசா திட்டத்தைத் தொடங்கி...