Newsஇலங்கையில் காதலியை கண்காணிக்க இளைஞனின் அதிர்ச்சி செயல்

இலங்கையில் காதலியை கண்காணிக்க இளைஞனின் அதிர்ச்சி செயல்

-

இலங்கையில் முஸ்​லிம் பெண்கள் அணியும் அபாயாவை அணிந்துகொண்டு சுற்றி திரிந்து கொண்டிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி ரயில் நிலையத்தில் இவ்வாறு அலைந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளால் பிடித்து, காலி பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காலி மக்ளுவவை வசிப்பிடமாகக் கொண்ட 27 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை ரயில் நிலையத்துக்கு வந்திருந்த அவ்விளைஞன், கொழும்புக்குச் செல்வதற்காக ரயில் பற்றுச்சீட்டை பெற்றுள்ளார்.

அவரது குரல் தொடர்பில் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை பின்தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

எனினும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடையுடன் அலைந்து திரிபவர் ஆண்ணொருவர் என்பதை பாதுகாப்பு அதிகாரிகள் இனங்கண்டு கொண்டனர். அதன்பின்னர் அவரை பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

தன்னுடைய காதலி இன்னுமொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என கேள்விப்பட்டேன். அவ்விருவரும் காலி ரயில் நிலையத்துக்கு வருகின்றனர் என்றும் தகவல் கிடைத்தது. அதன்பின்னரே, இவ்வாறு முகத்தை மறைத்துக்கொண்டு, பெண்களின் உடையில் இங்கு வந்தேன் என தெரிவித்துள்ளார்.

அந்த அபாயா உடையானது, அவ்விளைஞனின் தாயுடையது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவ்விளைஞனை ரயில் பாதுகாப்பு அதிகாரிகள், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். ​மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

One Nation-இல் சேர Branaby Joyce-இற்கு அழைப்பு!

முன்னாள் துணைப் பிரதமர் Branaby Joyce-ஐ One Nation-இல் சேர Pauline Hanson அழைப்பு விடுத்துள்ளார். Branaby சமீபத்தில் தேசியக் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார். தனக்கும்...

Bluesky-உடன் இணையும் வெள்ளை மாளிகை

எலோன் மஸ்க்கின் "X" சமூக ஊடக தளத்திற்கு போட்டியாளரான Bluesky-உடன் வெள்ளை மாளிகை இணைந்துள்ளது. அதன் முதல் பதிவாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திலிருந்து பல்வேறு மீம்ஸ்கள்,...

டிரம்பை சந்திக்க செல்கிறார் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாளை வெள்ளை மாளிகைக்கு சென்று டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு உலக ஊடகங்களில் பெரும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான புதிய படி ஆரம்பம்

குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கான நேரடி ஆய்வுகள் இந்த அக்டோபரில் தொடங்கும். இது புதிய விதிகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டமாகும். மேலும்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் சர்ச்சைக்குரிய வீடியோ நீக்கம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் காணொளி குறித்து கிரிக்கெட் உலகில் சில விவாதங்கள் நடந்தன. இந்த சர்ச்சைக்குரிய காணொளி, கைகுலுக்காததற்காக இந்தியாவை கேலி செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இது ஆசிய...