Newsஅடுத்த மாதம் பலாலியில் இருந்து ஏயார் இந்தியா வானூர்தி சேவை

அடுத்த மாதம் பலாலியில் இருந்து ஏயார் இந்தியா வானூர்தி சேவை

-

பலாலியில் உள்ள யாழ்ப்பாண அனைத்துலக வானூர்தி நிலையத்திற்கான வானூர்தி சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் தொடக்க வாரத்திற்கு இரண்டு தடவை பலாலிக்கு வானூர்திகளை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

75-90 ஆசனங்கள் உள்ள வானூர்தி என விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் வரும் பருவ காலமாக தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு வானூர்தி நிலையத்திற்கான அனைத்துலக வானூர்தி சேவைகள் ஜூலை 1 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என்று சிறிலங்கா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஒக்ரோபர் 17, 2019 அன்று, சென்னையில் இருந்து அலையன்ஸ் ஏர் வானூர்தி பலாலி வானூர்தி நிலையத்தில் தரையிறங்கிய முதல் வணிக அனைத்துலக வானூர்தி என்பது குறிப்பிடத்தக்கது என்று கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...