Newsஆஸ்திரேலியாவில் கோர விபத்து - இந்திய பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – இந்திய பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு

-

ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற கார் விபத்தில் பஞ்சாப் பாடகர் நிர்வாயிர் சிங் உயிரிழந்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வடமேற்கே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் நிர்வாயிர் சிங் என்பவர் சிக்கி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு வெளியான அறிக்கையில், நிர்வாயிர் சிங் தவறான இடத்தில், தவறான நேரத்தில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார் என தெரிவித்துஉள்ளது.

9 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இசை தொழிலை சிங் தொடர்ந்து வந்துள்ளார். அவரது மை டர்ன் என்ற ஆல்பத்தில் இடம் பெற்ற தேரே பீனா என்ற பாடல் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்த பாடல்களில் ஒன்று.

இந்த விபத்தில் சிக்கிய 3-வது காரில் இருந்தவர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் இருந்து வல்லான் பகுதியை சேர்ந்த ஆண் மற்றும் சன்பர்ரி பகுதியை சேர்ந்த பெண் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Latest news

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

செய்யறிவு தொழில்நுட்பங்கள் தற்போது அதிக வளர்ச்சியைக் கண்டு, பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது...

2024 இல் ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறுபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

ஆன்லைன் விளம்பரங்களில் ஃபேஷன் நட்சத்திரங்களைச் சித்தரிப்பதால் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் ஃபேஷன் நட்சத்திரங்களின் 118 சமூக ஊடக கணக்குகளை...

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்று...

பணவீக்கத்திற்கு முதன்மைக் காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகப்படியான செலவுதான்

மத்திய அரசு - மாநில மற்றும் உள்ளூர் அரசுகளின் அதிகப்படியான செலவுகள் நாட்டின் பணவீக்கத்தை நேரடியாகப் பாதித்துள்ளதாக முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கோவிட்...

மத்திய அரசுக்கும் விக்டோரியா அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் – பல தேசிய பூங்காக்கள் ஆபத்தில்

முர்ரே-டார்லிங் பேசின் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும் விக்டோரியா மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் பல தேசிய பூங்காக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. விக்டோரியா மாநிலத்தின் உயிரியல்...

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி ஆதரவு சேவை

குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிவாரணம் வழங்க புதிய ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் கடினமான பகுதிகளில் வசிக்கும்...