Newsநித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

நித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

-

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும் அவர் கோரியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவை வினவியபோது, நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் பதில் வழங்கப்பட்டது.

Latest news

விக்டோரியா காட்டுத்தீ காரணமாக 1,000 வீட்டு மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான ஒரு ஜெட் விமானம்

அமெரிக்காவில் 8 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் Bombardier Challenger 600...

பள்ளிப் பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தல்

பள்ளி விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்ற மாநிலங்களை விட முன்னதாகவே தொடங்கும் என்று...

அமெரிக்காவில் விபத்துக்குள்ளான ஒரு ஜெட் விமானம்

அமெரிக்காவில் 8 பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் புறப்படும் போது விபத்துக்குள்ளாகி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் Bombardier Challenger 600...

பள்ளிப் பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தல்

பள்ளி விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்ற மாநிலங்களை விட முன்னதாகவே தொடங்கும் என்று...