Newsநித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

நித்தியானந்தாவிடம் இருந்து ரணிலுக்கு கடிதம்?

-

இந்திய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகின்றது.

எனினும் இந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள சாமியார் நித்தியானந்தா இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருப்பதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக அடைக்கலம் தருமாறும் அவர் கோரியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவத்துக்கான அனைத்து செலவுகளையும் தாம் வாழ்ந்து வரும் சொர்க்கப்பூமியான கைலாசம் ஏற்றுக்கொள்ளும் என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவை வினவியபோது, நித்தியானந்தாவிடம் இருந்து எந்த கடிதங்களும் கிடைக்கவில்லை. அத்துடன் இந்த செய்தியில் உண்மையில்லை என்றும் பதில் வழங்கப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் விசா பிரச்சனை உள்ளவர்களுக்கு அரசு உதவி

உங்கள் ஆஸ்திரேலிய விசா காலாவதியாகப் போகிறது அல்லது ஏற்கனவே காலாவதியாகிவிட்டால், நீங்கள் குடிவரவு நிலைத் தீர்வு சேவையிலிருந்து (SRSS) உதவி பெறலாம். இந்த சேவை ஆஸ்திரேலியாவில் விசா...

அமெரிக்காவில் அமைதிப் பேரணிக்குப் பிறகு உலகளவில் புத்த மதத்திற்கு அதிக தேவை

புத்த மதம் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கை முறையாகக் காணப்படுகிறது என்றும், அது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமேயான மதமாக மட்டுமல்லாமல், உலகத்துடன் இணக்கமான வாழ்க்கை...

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது டிரம்ப் நியாயமற்ற வரி விதிப்பு

கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதை எதிர்த்த 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்...

Bendigo-இல் கார் கவிழ்ந்ததில் 17 வயது சிறுவன் படுகாயம்

இன்று காலை Bendigo அருகே கார் கவிழ்ந்ததில் 17 வயது இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Elmore-இல் உள்ள Raywood சாலையில் அதிகாலை 2.30...

மெல்பேர்ணில் டாக்சிகள் இரவில் மீட்டர்களைப் பயன்படுத்துவதில்லை என குற்றம்

மெல்பேர்ணில் ஒரு டாக்ஸி ஓட்டுநர் மீட்டரைப் பயன்படுத்த மறுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, நகரின் டாக்ஸி துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது...

Bendigo-இல் கார் கவிழ்ந்ததில் 17 வயது சிறுவன் படுகாயம்

இன்று காலை Bendigo அருகே கார் கவிழ்ந்ததில் 17 வயது இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Elmore-இல் உள்ள Raywood சாலையில் அதிகாலை 2.30...