Cinemaதனுஷ், செல்வராகவன், யுவன் காம்போவில் வெளியான 'நானே வருவேன்' முதல் பாடல்

தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போவில் வெளியான ‘நானே வருவேன்’ முதல் பாடல்

-

நானே வருவேன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. சுமார் 3.30 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்டுள்ளது இந்த பாடல். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா காம்போவில் வெளிவந்துள்ள பாடல் இது. அதனால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் எழுதி இயக்கி உள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அண்மையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற மெகா ஹிட் படங்களை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ரகம். அதனால் எதிர்பார்ப்பு இந்த கூட்டணிக்கு நானே வருவேன் படத்தில் எகிறி இருந்தது.

அதன்படி தற்போது ‘வீரா சூரா’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை செல்வராகவன் எழுதி உள்ளார். யுவன் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

மெல்பேர்ணில் ஒரு காவல் நிலையம் அருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது

ஜனவரி 3 ஆம் திகதி, மெல்பேர்ணில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே நள்ளிரவு 12 மணியளவில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். துப்பாக்கிச் சூடு...