Cinemaதனுஷ், செல்வராகவன், யுவன் காம்போவில் வெளியான 'நானே வருவேன்' முதல் பாடல்

தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போவில் வெளியான ‘நானே வருவேன்’ முதல் பாடல்

-

நானே வருவேன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. சுமார் 3.30 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்டுள்ளது இந்த பாடல். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா காம்போவில் வெளிவந்துள்ள பாடல் இது. அதனால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் எழுதி இயக்கி உள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அண்மையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற மெகா ஹிட் படங்களை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ரகம். அதனால் எதிர்பார்ப்பு இந்த கூட்டணிக்கு நானே வருவேன் படத்தில் எகிறி இருந்தது.

அதன்படி தற்போது ‘வீரா சூரா’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை செல்வராகவன் எழுதி உள்ளார். யுவன் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...