Cinemaதனுஷ், செல்வராகவன், யுவன் காம்போவில் வெளியான 'நானே வருவேன்' முதல் பாடல்

தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போவில் வெளியான ‘நானே வருவேன்’ முதல் பாடல்

-

நானே வருவேன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. சுமார் 3.30 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்டுள்ளது இந்த பாடல். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா காம்போவில் வெளிவந்துள்ள பாடல் இது. அதனால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘வி கிரியேஷன்ஸ்’ சார்பில் எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் எழுதி இயக்கி உள்ளார். தனுஷ், யோகி பாபு, பிரபு, இந்துஜா ஆகியோருடன் வெளிநாட்டு நடிகை எல்லி இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் இந்த படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அண்மையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற மெகா ஹிட் படங்களை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான படங்களில் இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் ரகம். அதனால் எதிர்பார்ப்பு இந்த கூட்டணிக்கு நானே வருவேன் படத்தில் எகிறி இருந்தது.

அதன்படி தற்போது ‘வீரா சூரா’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை செல்வராகவன் எழுதி உள்ளார். யுவன் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

Latest news

RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இணைந்துள்ள இலங்கை பொறியாளர்

அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் நிறுவனங்களின் சர்வதேச பல்கலைக்கழகம் RMIT நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியில் இலங்கை பொறியாளர் ஒருவரும் இணைந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பொறியாளர்கள் குழுவின்...

மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ள விண்கலம்

பல மாதங்களாக செயல்படாமல் இருந்த Voyager-1 விண்கலம் மீண்டும் ஆழமான விண்வெளியில் இருந்து படிக்கக்கூடிய தரவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது. Voyager-1 ஆய்வு பல மாதங்களாக செயலிழந்த பிறகு...

உலகின் சக்தி வாய்ந்த 100 நபர்களில் இடம்பிடித்துள்ள இலங்கைப் பெண்

டைம்ஸ் சஞ்சிகையால் பெயரிடப்பட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 நபர்களில் இலங்கைப் பெண்ணான ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். 20 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் சமற்கிருத சமூகத்திற்காக உரத்த...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு

அவுஸ்திரேலியாவில் சட்டவிரோத ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியா ஐஸ் போதைப்பொருளுக்கு உலகில் அதிக லாபம் ஈட்டும் சந்தையாகக் கருதப்படுவதோடு, பனிக்கட்டிகளுக்கு மேலதிகமாக,...

தடைசெய்யப்பட்ட சிட்னி கேசினோ கிளப்பிற்கு பச்சை விளக்கு

தடை செய்யப்பட்ட கிரவுன் கேசினோ கிளப் மீண்டும் திறக்கப்படுவதற்கு சில சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் சூதாட்ட விடுதியாக...

ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்களுக்கு வேலை தேடுவதற்கான வழிகாட்டி

அவுஸ்திரேலியாவிற்கு வரும் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கு அந்நாட்டின் வேலைச் சந்தையில் புதிய வேலைவாய்ப்பை விரைவாகக் கண்டறிய தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் பல வேலை வாய்ப்புகள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படுவதில்லை,...