Breaking Newsசிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்!

சிட்னி விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்!

-

சிட்னியிலிருந்து மெல்போர்ன் வந்த குவாண்டாஸ் விமானம் மெல்போர்னில் தரையிறங்கியதும், 200 பயணிகளை உடனடியாக வெளியே வரும்படி பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

QF 487 என்ற விமானத்தில் பயணித்த ஒருவர், சிட்னி விமான நிலையத்தில் சரியாகப் பரிசோதிக்கப்படவில்லை என்பதை பாதுகாப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

நடுவானில் இந்த விடயம் கண்டறியப்பட்டதுடன் மெல்போர்னில் வைத்து உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் – விக்டோரியா ஸ்டேட் பொலிஸார் மற்றும் விமான நிலைய பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு அளித்து அனைத்து பயணிகளும் சோதனை செய்தனர்.

அவர்கள் யாரும் கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து பயணிகளும் மெல்போர்ன் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர், மேலும் சந்தேகத்திற்கிடமான எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Latest news

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

இரண்டாவது முறையாக தென்பட்ட சுறா மீன்கள் – மீண்டும் மூடப்பட்ட சிட்னி கடற்கரை

ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில்...