பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு, இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
இதன்போது பிரிட்டிஷ் மகாராணியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் சார்பில் அனுதாபங்களை தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, இரு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தும் யோசனையையும் முன்வைத்தார்.
அத்துடன், இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அனுதாபம் தெரிவித்து ஆளும் மற்றும் எதிரணிகள் இணைந்து பிரேரணையொன்றை முன்வைத்து, அது தொடர்பில் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.