Newsஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

-

மட்டக்களப்பு செங்கலடி கடல்பகுதியில் இருந்து ஆஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலில் வைத்தும் இவர்களை கடற்கரையில் இருந்து இயந்திரப்படகிற்கு கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் உட்பட 89 பேரை மட்டக்களப்பு செங்கலடி கடல் பிரதேசத்திலும் நாவலடி கடற்கரையிலும் வைத்து கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கடைய சம்பவதினமான இன்று அதிகாலை மட்டக்களப்பு கடல்பரப்பில் கடற்பரைடயினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டு செங்கலடி கடல் பிரப்பில் இயந்திரப்படகு ஒன்று பிரயாணிப்பதை அவதானித்த கடற்படையினர் சுற்றிவளைத்து குறித்த படகை மறித்து சோதனையிட்டபோது அதில் சட்டவிரோதமாக ஆஸ்ரேலியாவுக்கு பிரயாணித்த 60 ஆண்கள், 13 பெண்கள், மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 84 பேரை கடலில் வைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, மடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கடற்படையினர் அழைத்துச் சென்று திருகோணமலை தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலில் காத்திருந்த இயந்திரப்படகிற்கு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி கடற்கரையில் இருந்து 4 சிறிய இயந்திரப்படகுகளில் குடியேற்ற காரர்களை ஏற்றி கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பேரை நாவலடி கடற்கரையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் 4 படகுகள், 4 இயந்திரங்கள மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Latest news

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...

இந்தியாவில் பரவும் வைரஸ் கோவிட்டை விட மோசமானதா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பதிவான கொடிய Nipah வைரஸ் பரவுவதால், முழு ஆசியப் பகுதியும் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

விக்டோரியா காட்டுத்தீயில் 400 வீடுகள் எரிந்து நாசம்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ, உயிருக்கும் சொத்துக்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மாநில வரலாற்றில் மிக அதிக வெப்ப அலைக்குப் பிறகும் நிலைமை...