Newsஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

-

மட்டக்களப்பு செங்கலடி கடல்பகுதியில் இருந்து ஆஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலில் வைத்தும் இவர்களை கடற்கரையில் இருந்து இயந்திரப்படகிற்கு கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் உட்பட 89 பேரை மட்டக்களப்பு செங்கலடி கடல் பிரதேசத்திலும் நாவலடி கடற்கரையிலும் வைத்து கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கடைய சம்பவதினமான இன்று அதிகாலை மட்டக்களப்பு கடல்பரப்பில் கடற்பரைடயினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டு செங்கலடி கடல் பிரப்பில் இயந்திரப்படகு ஒன்று பிரயாணிப்பதை அவதானித்த கடற்படையினர் சுற்றிவளைத்து குறித்த படகை மறித்து சோதனையிட்டபோது அதில் சட்டவிரோதமாக ஆஸ்ரேலியாவுக்கு பிரயாணித்த 60 ஆண்கள், 13 பெண்கள், மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 84 பேரை கடலில் வைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, மடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கடற்படையினர் அழைத்துச் சென்று திருகோணமலை தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலில் காத்திருந்த இயந்திரப்படகிற்கு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி கடற்கரையில் இருந்து 4 சிறிய இயந்திரப்படகுகளில் குடியேற்ற காரர்களை ஏற்றி கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பேரை நாவலடி கடற்கரையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் 4 படகுகள், 4 இயந்திரங்கள மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Latest news

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறைக்கு சிறப்பு அதிகாரங்கள் – மீறுபவர்களுக்கு $5500 அபராதம்

இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog ஆஸ்திரேலியாவிற்கு விஜயம் செய்ததை அடுத்து, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் காவல்துறைக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கியுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போராட்டங்களின்...

Uber Eats ஓட்டுநரை இனரீதியாக துஷ்பிரயோகம் செய்த டீனேஜ் பெண்கள் மீது விசாரணைகள்

சிட்னி பல்பொருள் அங்காடியில் Uber Eats டெலிவரி டிரைவர் மற்றும் வாடிக்கையாளர்களை இனவெறியுடன் துஷ்பிரயோகம் செய்ததாக இரண்டு டீனேஜ் பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து...

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலில் விழுந்து நொறுங்கிய இலகுரக விமானம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் Goolwa South-இல் உள்ள Long Bay அருகே ஒரு இலகுரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில்...

தெற்கு ஆஸ்திரேலியாவின் கடலில் விழுந்து நொறுங்கிய இலகுரக விமானம்

தெற்கு ஆஸ்திரேலியாவின் Goolwa South-இல் உள்ள Long Bay அருகே ஒரு இலகுரக விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில்...

இஸ்ரேல் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக சிட்னியில் கடும் எதிர்ப்புகள்

இஸ்ரேல் அதிபரின் ஆஸ்திரேலியா பயணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அடுத்த வாரம் ஐந்து நாள் பயணமாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளார். கடந்த டிசம்பரில்...