Newsஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

-

மட்டக்களப்பு செங்கலடி கடல்பகுதியில் இருந்து ஆஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலில் வைத்தும் இவர்களை கடற்கரையில் இருந்து இயந்திரப்படகிற்கு கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் உட்பட 89 பேரை மட்டக்களப்பு செங்கலடி கடல் பிரதேசத்திலும் நாவலடி கடற்கரையிலும் வைத்து கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கடைய சம்பவதினமான இன்று அதிகாலை மட்டக்களப்பு கடல்பரப்பில் கடற்பரைடயினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டு செங்கலடி கடல் பிரப்பில் இயந்திரப்படகு ஒன்று பிரயாணிப்பதை அவதானித்த கடற்படையினர் சுற்றிவளைத்து குறித்த படகை மறித்து சோதனையிட்டபோது அதில் சட்டவிரோதமாக ஆஸ்ரேலியாவுக்கு பிரயாணித்த 60 ஆண்கள், 13 பெண்கள், மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 84 பேரை கடலில் வைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, மடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கடற்படையினர் அழைத்துச் சென்று திருகோணமலை தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலில் காத்திருந்த இயந்திரப்படகிற்கு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி கடற்கரையில் இருந்து 4 சிறிய இயந்திரப்படகுகளில் குடியேற்ற காரர்களை ஏற்றி கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பேரை நாவலடி கடற்கரையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் 4 படகுகள், 4 இயந்திரங்கள மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Latest news

விக்டோரியாவில் பெண் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம் அதன் நகராட்சி மன்றங்களில் பெண்களின் தலைமையை அதிகரிக்க தொடர்ச்சியான புதிய திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் நகராட்சி மன்றங்களில் 50% கவுன்சில் தலைமைப்...

சர்வதேச முதலீட்டை நோக்கித் திரும்பும் ஆஸ்திரேலிய வணிக ஜாம்பவான்கள்

ஆஸ்திரேலியாவில் நன்கு அறியப்பட்ட சொத்து முதலீட்டாளரான Scott O’Neill, நியூசிலாந்தில் தனது புதிய முதலீடுகளைச் செய்யத் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலிய சொத்துச் சந்தையில் விலை உயர்வு/வட்டி விகிதங்கள்...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

ஆஸ்திரேலியாவிற்கு குறைந்த விலை பொருட்களை வழங்கும் ஒரு கனேடிய நிறுவனம்

கனேடிய தள்ளுபடி சில்லறை விற்பனையாளர் Dollarama, ஆஸ்திரேலிய சங்கிலித் தொடர் நிறுவனமான The Reject Shop-ஐ கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் $259 மில்லியன் மதிப்புடையது, மேலும்...