Newsஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 84 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

-

மட்டக்களப்பு செங்கலடி கடல்பகுதியில் இருந்து ஆஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலில் வைத்தும் இவர்களை கடற்கரையில் இருந்து இயந்திரப்படகிற்கு கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் உட்பட 89 பேரை மட்டக்களப்பு செங்கலடி கடல் பிரதேசத்திலும் நாவலடி கடற்கரையிலும் வைத்து கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கடைய சம்பவதினமான இன்று அதிகாலை மட்டக்களப்பு கடல்பரப்பில் கடற்பரைடயினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டு செங்கலடி கடல் பிரப்பில் இயந்திரப்படகு ஒன்று பிரயாணிப்பதை அவதானித்த கடற்படையினர் சுற்றிவளைத்து குறித்த படகை மறித்து சோதனையிட்டபோது அதில் சட்டவிரோதமாக ஆஸ்ரேலியாவுக்கு பிரயாணித்த 60 ஆண்கள், 13 பெண்கள், மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 84 பேரை கடலில் வைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, மடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கடற்படையினர் அழைத்துச் சென்று திருகோணமலை தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலில் காத்திருந்த இயந்திரப்படகிற்கு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி கடற்கரையில் இருந்து 4 சிறிய இயந்திரப்படகுகளில் குடியேற்ற காரர்களை ஏற்றி கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பேரை நாவலடி கடற்கரையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் 4 படகுகள், 4 இயந்திரங்கள மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Latest news

தாய்லாந்தில் நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முடிவு!

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை கீழ்சபை நிறைவேற்றியுள்ளது. அந்தத் தத்தெடுப்பின் மூலம் சமத்துவத்திற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையை தாய்லாந்து எடுத்துள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரே...

ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் பற்றி வெளியான ஒரு புதிய தகவல்

உலகின் மிக வெற்றிகரமான பன்முக கலாச்சார சமூகங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியா பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய ஆஸ்திரேலிய குடிமக்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சக அறிக்கைகள்...

புட்களை பரிசீலிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனைக் குழு

தெரியாத பிரதேசத்தில் காணப்படும் புல்லை எருமைகளுக்கு உணவாக கொடுப்பதை பரிசீலிக்க ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு உணவாக எருமைப் புல் வழங்கப்பட்டாலும், அந்த வகைப் புல்லால்...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்

குழந்தைகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போதெல்லாம் சில ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது. கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை இன்றைய உலகில் இன்றியமையாத அங்கம் எனவும் அதன் பாவனையிலிருந்து...

இளம் பெண்கள் உட்பட ஆஸ்திரேலிய பெண்களுக்கான புதிய APP

ஆஸ்திரேலிய சுகாதார வல்லுநர்கள் பெண்களின் உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிய புதிய பயன்பாட்டை (APP) அறிமுகப்படுத்தியுள்ளனர். AI தொழில்நுட்பம் மூலம் டெலிஹெல்த் சேவைகளை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது என்று...