Breaking Newsஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த சில மாதங்களில் கூடுதலான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்திருக்கும் வேளையில், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

La Nina எனும் பருவநிலை நிகழ்வால், வசந்த காலத்தில் வழக்கமான அளவை விட ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

அதன் தாக்கம், கோடைக்காலம் வரை நீடிக்கக்கூடும் என்று பருவநிலை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி, கடுமையான புயலில் இருந்தும் வெள்ளத்தில் இருந்தும் இன்னும் மீண்டு வருகிறது.

இதற்கு முன்னர், சிட்னி நகரில் 30ஆண்டுகளில் கண்டிராத வண்ணம் கனத்த மழை பெய்திருந்தது. அப்போது ஆயிரக் கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்னொரு முறை வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுவதால், மக்கள் இப்போதே அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் நெருக்கடிநிலைச் சேவைகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

மெல்பேர்ணில் ஒரு காவல் நிலையம் அருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது

ஜனவரி 3 ஆம் திகதி, மெல்பேர்ணில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே நள்ளிரவு 12 மணியளவில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். துப்பாக்கிச் சூடு...