Breaking Newsஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த சில மாதங்களில் கூடுதலான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்திருக்கும் வேளையில், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

La Nina எனும் பருவநிலை நிகழ்வால், வசந்த காலத்தில் வழக்கமான அளவை விட ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

அதன் தாக்கம், கோடைக்காலம் வரை நீடிக்கக்கூடும் என்று பருவநிலை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி, கடுமையான புயலில் இருந்தும் வெள்ளத்தில் இருந்தும் இன்னும் மீண்டு வருகிறது.

இதற்கு முன்னர், சிட்னி நகரில் 30ஆண்டுகளில் கண்டிராத வண்ணம் கனத்த மழை பெய்திருந்தது. அப்போது ஆயிரக் கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்னொரு முறை வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுவதால், மக்கள் இப்போதே அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் நெருக்கடிநிலைச் சேவைகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...