Breaking Newsஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த சில மாதங்களில் கூடுதலான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்திருக்கும் வேளையில், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

La Nina எனும் பருவநிலை நிகழ்வால், வசந்த காலத்தில் வழக்கமான அளவை விட ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

அதன் தாக்கம், கோடைக்காலம் வரை நீடிக்கக்கூடும் என்று பருவநிலை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி, கடுமையான புயலில் இருந்தும் வெள்ளத்தில் இருந்தும் இன்னும் மீண்டு வருகிறது.

இதற்கு முன்னர், சிட்னி நகரில் 30ஆண்டுகளில் கண்டிராத வண்ணம் கனத்த மழை பெய்திருந்தது. அப்போது ஆயிரக் கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்னொரு முறை வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுவதால், மக்கள் இப்போதே அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் நெருக்கடிநிலைச் சேவைகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...