Breaking Newsஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் ஏற்படவுள்ள பாதிப்பு – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த சில மாதங்களில் கூடுதலான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்திருக்கும் வேளையில், அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

La Nina எனும் பருவநிலை நிகழ்வால், வசந்த காலத்தில் வழக்கமான அளவை விட ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

அதன் தாக்கம், கோடைக்காலம் வரை நீடிக்கக்கூடும் என்று பருவநிலை வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதி, கடுமையான புயலில் இருந்தும் வெள்ளத்தில் இருந்தும் இன்னும் மீண்டு வருகிறது.

இதற்கு முன்னர், சிட்னி நகரில் 30ஆண்டுகளில் கண்டிராத வண்ணம் கனத்த மழை பெய்திருந்தது. அப்போது ஆயிரக் கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இன்னொரு முறை வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுவதால், மக்கள் இப்போதே அதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் நெருக்கடிநிலைச் சேவைகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...