Newsஇலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

இலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

-

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு நேற்று ஆரம்பமானது.

நேற்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன எனவும் அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் கொடிகளைப் பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கப்படும் மதுபானம் மீதான வரிகள்

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் மதுபானங்கள் மற்றும் முன் கலந்த பானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஏனென்றால், பணவீக்கத்திற்கு ஏற்ப அரசாங்கம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மதுபான வரியை அதிகரிக்கிறது...

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை – 1200 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் Bloomberg செய்தி...

இன்று முதல் Economy வகுப்பு பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கும் Qantas

Qantas நிறுவனம் இன்று முதல் புதிய Economy Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் Qantas Economy வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Economy Plus திட்டம் பயணிகளுக்கு...

ஜப்பானில் ski lift-இல் சிக்கி ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான ski ரிசார்ட்டில் ski lift-இல் சிக்கி 22 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். "பையில் இணைக்கப்பட்டிருந்த இடுப்புப்...

Logan பகுதியில் பல வாகனங்கள் மோதி விபத்து

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் Grater Brisbane பகுதியில் உள்ள Logan நகருக்கு அருகில் பல வாகனங்கள் மோதிக்கொண்டதால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Loganholme பசிபிக் மோட்டார்வேயில்...

கடுமையான வெப்பம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

பெர்த்தின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கி வருவதால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Scarborough, Trigg, Doubleview,...