Newsஇலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

இலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

-

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு நேற்று ஆரம்பமானது.

நேற்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன எனவும் அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் கொடிகளைப் பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Latest news

விக்டோரியாவில் அதிகரித்துவரும் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவல்

இந்த ஆண்டு விக்டோரியாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. விக்டோரியாவின் வடகிழக்கில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்து பறவைக் காய்ச்சலின் மூன்றாவது வழக்கு பதிவானதைத்...

ஆஸ்திரேலியாவில் போக்கர் இயந்திரத்தால் 8 பில்லியன் டாலர்கள் இழப்பு

சூதாட்டத்தால் மக்கள் அதிக அளவில் பணத்தை இழக்கும் சூழ்நிலை ஆஸ்திரேலியா முழுவதும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மதுபானம் மற்றும் கேமிங் தரவுகள், அந்த மாநிலத்தில்...

விக்டோரியாவில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்க நடவடிக்கை

விக்டோரியா மாநிலத்தில் ஜாமீன் சட்டங்களை கடுமையாக்குவதில் காவல்துறை கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் காவல்துறைத் தலைமை ஆணையர் ஷேன் பாட்டன் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து தனது பதவியை...

கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி

இந்தியாவில் ஒரு அரசியல்வாதியை கிரிக்கெட் மட்டையால் தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. முகமூடி அணிந்த ஒரு குழு, காங்கிரஸ் எம்.பி. ரீ ரகிபுல் உசேன்...

மெல்பேர்ண் பள்ளிக்கு எழுந்துள்ள AI நெருக்கடி

மெல்பேர்ண் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் ஆபாசப் படங்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகியுள்ளன. கிளாட்ஸ்டோன் பார்க் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பல மாணவிகளின் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தைப்...

ஆஸ்திரேலியன் சூப்பர் நிறுவனத்திற்கு மில்லியன் டாலர்கள் அபராதம்

ஆஸ்திரேலிய சூப்பர் பைனான்சியல் நிறுவனத்திற்கு $27 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Australian Super Fund ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி நிறுவனமாகும். மேலும் இது உலகின் 16வது...