Newsஇலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

இலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

-

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு நேற்று ஆரம்பமானது.

நேற்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன எனவும் அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் கொடிகளைப் பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Latest news

Medicare டிஜிட்டல் சேவைகளை ஒரே இடத்தில் அணுகுவதற்கான புதிய வழி

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்கள் ஒரே ஒரு செயலி மூலம் Medicare digital சேவைகளைப் பயன்படுத்த முடியும். அதன்படி, Express Plus Medicare செயலியைப் பயன்படுத்தாமல் myGov...

ஆஸ்திரேலியாவில் வீட்டிலிருந்து வேலை செய்வதால் காலியாக உள்ள அலுவலக கட்டிடங்கள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் அலுவலக காலியிட விகிதங்கள் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல்...

Asbestos-ஐ தடை செய்வதில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் Asbestos-ஐ தடை செய்வதில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அமைப்புகள், வெள்ளை நிற Asbestos...

திவால்நிலைக்கு தள்ளப்பட்ட XL Express நிறுவனம் – 200 பேர் வேலையிழக்கும் நிலை

ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முன்னணி தேசிய போக்குவரத்து மற்றும் கப்பல் நிறுவனமான XL Express கலைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிறுவனம் சுமார் 42 மில்லியன்...

Asbestos-ஐ தடை செய்வதில் முன்னணியில் உள்ள ஆஸ்திரேலியா

தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் Asbestos-ஐ தடை செய்வதில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் உட்பட பல அமைப்புகள், வெள்ளை நிற Asbestos...

திவால்நிலைக்கு தள்ளப்பட்ட XL Express நிறுவனம் – 200 பேர் வேலையிழக்கும் நிலை

ஆஸ்திரேலியாவில் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முன்னணி தேசிய போக்குவரத்து மற்றும் கப்பல் நிறுவனமான XL Express கலைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நிறுவனம் சுமார் 42 மில்லியன்...