Newsஇலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

இலங்கையில் போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூற அனுமதி!

-

யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த திலீபனின் 35 ஆவது ஆண்டு நிவைவேந்தல் நிகழ்வு நேற்று ஆரம்பமானது.

நேற்று முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வடக்கு – கிழக்கிலும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்த நிலையிலே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன எனவும் அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாகவுள்ளார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் கொடிகளைப் பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க முடியாது எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கரை ஒதுங்கியதில் 28 திமிங்கலங்கள் உயிரிழப்பு

மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய 160க்கும் மேற்பட்ட திமிங்கலங்களில் 28 இறந்துவிட்டன. 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு விட தன்னார்வ குழுக்கள் நடவடிக்கை...

மெல்போர்னின் Highpoint ஷாப்பிங் சென்டரில் மற்றொரு கத்திக்குத்து

மெல்போர்னில் உள்ள ஹை பாயின்ட் ஷாப்பிங் சென்டரில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மைனர் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள்...

சுற்றுலாப் பயணிகள் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியா இடம்பிடித்துள்ளது. CEOWORLD இதழ் இந்த நாடுகளுக்கு 2024 ஆம் ஆண்டையொட்டி பெயரிட்டுள்ளது. இங்கு விஜயம்...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற விரும்புவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற எதிர்பார்த்துள்ள சர்வதேச மாணவர்களுக்காக புதிய விழிப்புணர்வு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் மெல்போர்ன் பல்கலைக்கழக இணையதளத்திற்குச்...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...