Newsஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

-

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியாவின் உதவியை வலியுறுத்தி நிற்கின்றோம்.”

  • இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பு நாடு மட்டுமல்லாது, அது நமது சக்திவாய்ந்த முக்கியமான அண்டை நாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் உள்ளது.

பல தசாப்தங்களாக ஈழ தமிழர் இனப்பிரச்சினையில் இந்தியா தீவிரமான அக்கறை கொண்டுள்ளதுடன், இலங்கை உட்பட உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட எமது அவல நிலையைப் பற்றிய சிறந்த அறிவையும் புரிதலையும் கொண்டுள்ளது.

தமிழராகிய நாம் துன்பங்களை எதிர்கொள்ளும்போது, முதலில் உதவிக்கு வருவது இந்தியா தான். உதாரணமாக, 1983 இல் தமிழர்கள் சிங்கள காடையர்களால் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டு, தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட போது, இலட்சக்கணக்கான தமிழர்கள் சிறிய படகுகளில் இந்தியாவுக்கே பாதுகாப்புக்காகத் தப்பிச் சென்றனர்.

இப்போதும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகள் வாழ்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் உணவு, தங்குமிடம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை தமிழ் அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

இந்தியா பாதுகாப்பு வழங்கியது மட்டுமல்லாது, பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா, 1983இல் நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு எங்களின் பிரச்சினையை எடுத்துச் சென்று, தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நமது அவல நிலையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

ஐ.நாவில் எங்களுக்கு மீண்டும் இந்தியாவின் உதவி தேவைப்படுகின்றது. இது எங்களின் பாதுகாப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டது.

இலங்கை ஆயுதத் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்காகவும், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி நமக்குத் தேவை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது.

எமது பிராந்தியத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள எமது இனப்பிரச்சினை தொடர்பாக சரியான புரிதல் இல்லாத நாடுகளை விட, எமது பிராந்தியத்தின் தலைமை நாடாகிய, நமது அவலநிலையைப் பற்றி அதிக புரிதலையும் பொறுப்பையும் இந்தியா கொண்டுள்ளது.

நமது அண்டை நாடாக, ஐ.நா. மற்றும் பிற சர்வதேச மன்றங்களில் தலைமைப் பாத்திரத்தை வகிக்க இந்தியாவை நாம் வலியுறுத்துகிறோம். ” – என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

பாலி தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசிய பாலி தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணிக்க விரும்பும் ஆஸ்திரேலியர்களை குறிவைத்து பெரிய அளவிலான விசா மோசடி நடப்பதாக வங்கிகளும் பாதுகாப்புப் படையினரும் எச்சரித்துள்ளனர். போலி வலைத்தளங்கள்...

2026-இல் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்!

2026 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக வீட்டுவசதி நெருக்கடி தொடரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வீட்டுத் தேவை விநியோகத்தை விட அதிகமாக இருப்பதால், விலைகளும்...

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...

தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் – நாசர் வேண்டுகோள்

தயவு செய்து மீண்டும் நடியுங்கள் விஜய் என்று ரசிகர்கள் சார்பாக நாசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மலேசியாவில் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...