Newsஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

-

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியாவின் உதவியை வலியுறுத்தி நிற்கின்றோம்.”

  • இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பு நாடு மட்டுமல்லாது, அது நமது சக்திவாய்ந்த முக்கியமான அண்டை நாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் உள்ளது.

பல தசாப்தங்களாக ஈழ தமிழர் இனப்பிரச்சினையில் இந்தியா தீவிரமான அக்கறை கொண்டுள்ளதுடன், இலங்கை உட்பட உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட எமது அவல நிலையைப் பற்றிய சிறந்த அறிவையும் புரிதலையும் கொண்டுள்ளது.

தமிழராகிய நாம் துன்பங்களை எதிர்கொள்ளும்போது, முதலில் உதவிக்கு வருவது இந்தியா தான். உதாரணமாக, 1983 இல் தமிழர்கள் சிங்கள காடையர்களால் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டு, தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட போது, இலட்சக்கணக்கான தமிழர்கள் சிறிய படகுகளில் இந்தியாவுக்கே பாதுகாப்புக்காகத் தப்பிச் சென்றனர்.

இப்போதும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகள் வாழ்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் உணவு, தங்குமிடம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை தமிழ் அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

இந்தியா பாதுகாப்பு வழங்கியது மட்டுமல்லாது, பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா, 1983இல் நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு எங்களின் பிரச்சினையை எடுத்துச் சென்று, தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நமது அவல நிலையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

ஐ.நாவில் எங்களுக்கு மீண்டும் இந்தியாவின் உதவி தேவைப்படுகின்றது. இது எங்களின் பாதுகாப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டது.

இலங்கை ஆயுதத் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்காகவும், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி நமக்குத் தேவை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது.

எமது பிராந்தியத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள எமது இனப்பிரச்சினை தொடர்பாக சரியான புரிதல் இல்லாத நாடுகளை விட, எமது பிராந்தியத்தின் தலைமை நாடாகிய, நமது அவலநிலையைப் பற்றி அதிக புரிதலையும் பொறுப்பையும் இந்தியா கொண்டுள்ளது.

நமது அண்டை நாடாக, ஐ.நா. மற்றும் பிற சர்வதேச மன்றங்களில் தலைமைப் பாத்திரத்தை வகிக்க இந்தியாவை நாம் வலியுறுத்துகிறோம். ” – என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

REDcycle பேரழிவு தரும் தவறுக்குப் பிறகு ACCC முன்மொழிந்துள்ள புதிய திட்டம்

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்குகளை மறுசுழற்சி செய்வதற்கான மற்றொரு புதிய திட்டமாக மென்மையான பிளாஸ்டிக் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், Woolworths, Coles, Aldi, Nestlé, Mars மற்றும் McCormick...

பாலியல் ரீதியாக பரவும் நோய் பற்றி ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக பரவும் நோயால் ஏற்படும் குழந்தைகள் இறப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் 37 குழந்தைகள்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

NSW-வில் எரிவாயு குழாய் வெடிப்பு – இரு பள்ளி மாணவர்கள் வெளியேற்றம்

நியூ சவுத் வேல்ஸில் எரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு பள்ளி மாணவர்களும் ஒரு வீட்டில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியில் உள்ள Harris சாலை அருகே தொழிலாளர்கள் பழுதுபார்க்கும்...

மிகக் குறைந்த காய்ச்சல் தடுப்பூசி விகிதத்தைக் கொண்ட மாநிலமாக குயின்ஸ்லாந்து

கடந்த வாரம் குயின்ஸ்லாந்தில் சுமார் 4,000 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வயதினரிடையே, நாட்டிலேயே குயின்ஸ்லாந்தில் தான் காய்ச்சல் தடுப்பூசி போடும் விகிதம் மிகக்...

சிட்னி நீர்வழிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 21 நச்சு இரசாயனங்கள்

சிட்னியின் நீர்வழிகளில் 21 புதிய நிரந்தர இரசாயனங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Polyfluoroalkyl பொருட்கள் (PFAS) நிரந்தர இரசாயனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும் அவை...