Newsஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முயற்சி

-

“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியாவின் உதவியை வலியுறுத்தி நிற்கின்றோம்.”

  • இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய உறுப்பு நாடு மட்டுமல்லாது, அது நமது சக்திவாய்ந்த முக்கியமான அண்டை நாடாகவும், பிராந்திய வல்லரசாகவும் உள்ளது.

பல தசாப்தங்களாக ஈழ தமிழர் இனப்பிரச்சினையில் இந்தியா தீவிரமான அக்கறை கொண்டுள்ளதுடன், இலங்கை உட்பட உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட எமது அவல நிலையைப் பற்றிய சிறந்த அறிவையும் புரிதலையும் கொண்டுள்ளது.

தமிழராகிய நாம் துன்பங்களை எதிர்கொள்ளும்போது, முதலில் உதவிக்கு வருவது இந்தியா தான். உதாரணமாக, 1983 இல் தமிழர்கள் சிங்கள காடையர்களால் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டு, தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட போது, இலட்சக்கணக்கான தமிழர்கள் சிறிய படகுகளில் இந்தியாவுக்கே பாதுகாப்புக்காகத் தப்பிச் சென்றனர்.

இப்போதும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகள் வாழ்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் உணவு, தங்குமிடம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பை தமிழ் அகதிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் வழங்கி வருகின்றது.

இந்தியா பாதுகாப்பு வழங்கியது மட்டுமல்லாது, பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியா, 1983இல் நியூயோர்க்கில் நடந்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு எங்களின் பிரச்சினையை எடுத்துச் சென்று, தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் நமது அவல நிலையை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

ஐ.நாவில் எங்களுக்கு மீண்டும் இந்தியாவின் உதவி தேவைப்படுகின்றது. இது எங்களின் பாதுகாப்புடன் நேரடியாக சம்பந்தப்பட்டது.

இலங்கை ஆயுதத் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்காகவும், நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்துவதற்கு இந்தியாவின் உதவி நமக்குத் தேவை.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமையும் அதிகாரமும் உள்ளது.

எமது பிராந்தியத்திலிருந்து தொலைதூரத்திலுள்ள எமது இனப்பிரச்சினை தொடர்பாக சரியான புரிதல் இல்லாத நாடுகளை விட, எமது பிராந்தியத்தின் தலைமை நாடாகிய, நமது அவலநிலையைப் பற்றி அதிக புரிதலையும் பொறுப்பையும் இந்தியா கொண்டுள்ளது.

நமது அண்டை நாடாக, ஐ.நா. மற்றும் பிற சர்வதேச மன்றங்களில் தலைமைப் பாத்திரத்தை வகிக்க இந்தியாவை நாம் வலியுறுத்துகிறோம். ” – என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் இளைஞர்களுக்கான Barista Coffee பாடநெறி

விக்டோரியாவில் உள்ள ஒரு பகுதி இளைஞர்கள் Baristaக்களாக மாறுவதற்கான இலவச பயிற்சி வகுப்பைத் தொடங்கத் தயாராகி வருகிறது. விக்டோரியாவின் Corangamite-இல் உள்ள மாணவர்கள் ஏப்ரல் பள்ளி விடுமுறை...

NSW இல் போராட்டக்காரர்களால் அந்தோணி அல்பானீஸுக்கு இடையூறு

நியூ சவுத் வேல்ஸில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மீது எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ​​போராட்டக்காரர்கள்...

வட்டி விகிதக் குறைப்புக்குத் தயாராகும் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அடுத்த செவ்வாய்க்கிழமை புதிய வட்டி விகிதங்களை அறிவிக்க உள்ளது. ஆஸ்திரேலியர்கள் அடமானங்கள் உட்பட நிவாரணம் பெற அதிகளவில் ஆசைப்படுவதால், வட்டி விகிதக் குறைப்புக்குத்...

Werribee இடைத்தேர்தலில் தொழிற்கட்சி மீண்டும் வெற்றி 

சமீபத்தில் Werribeeயில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பலகா தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தொழிலாளர் கட்சி வேட்பாளர் ஜான் லிஸ்டர் வெற்றியின்...

Werribee இடைத்தேர்தலில் தொழிற்கட்சி மீண்டும் வெற்றி 

சமீபத்தில் Werribeeயில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பலகா தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தொழிலாளர் கட்சி வேட்பாளர் ஜான் லிஸ்டர் வெற்றியின்...

ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே சர்வதேச எல்லை நெருக்கடி

சர்வதேச வான்வெளி மற்றும் கடல் எல்லைகளில் சீனா பாதுகாப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை, தென் சீனக் கடலில் ஆஸ்திரேலிய கண்காணிப்பு...