Newsஆஸ்திரேலிய கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம் வெளியானது!

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம் வெளியானது!

-

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டை நாடும் மக்கள் நீண்ட கால தாமதத்தை எதிர்கொள்வதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

புதிய செயற்பாடுகளை கொண்ட கடவுச்சீட்டு வழங்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட “பி” வகைக்கு பதிலாக “ஆர்” பிரிவின் கீழ் புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் புகைப்படத்துடன் கூடிய பக்கம் புதிய பாதுகாப்பு முறைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கடவுச்சீட்டை வழங்கும் போது பல தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்வதும் கடவுச்சீட்டுகள் தாமதமாவதற்கு மற்றொரு காரணமாகும்.

கடந்த ஏப்ரலில் 160,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் அது 250,000 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் மாதாந்தம் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 05 இலட்சத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

Bondi தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆஸ்திரேலியா முழுவதும் தீபங்கள் ஏற்றி அஞ்சலி

கடந்த ஞாயிற்றுக்கிழமை Bondi கடற்கரைப் பகுதியில் 15 பேர் கொல்லப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நேற்றுடன் ஒரு வாரம் நிறைவடைகிறது. அதற்காக, நேற்று ஆஸ்திரேலியா முழுவதும்...

உலகின் முதல் முறையாக சக்கர நாற்காலியில் விண்வெளிக்குச் சென்ற நபர்

விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவர் விண்வெளியில் முதன்முதலில் நுழைந்தார். அதுதான் 33 வயதான ஜெர்மன் பொறியாளர்...

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...