Breaking Newsஇலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

இலங்கையின் பிரபல தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்

-

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் 41 வயதில் காலமானார்.

திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், உயிரிழந்துள்ளார்

இரத்தினபுரி, இறக்குவானை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர், இறக்குவானை சென். ஜோன்ஸ் தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். சிட்னி சந்திரசேகர என்பவரினால் 2008 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட சிங்கள சின்னத்திரை நாடகமான ‘ஏ9’ மூலம் தர்ஷன் தர்மராஜ் அறிமுகமானார்.

அவர் தமது சினிமா பயணத்தை அதே ஆண்டில் ‘பிரபாகரன்’ என்ற சிங்கள மொழித் திரைப்படத்தில் ஆரம்பித்தார். அதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வேடத்தில் நடித்திருந்தார்.

இலங்கை தமிழர்கள் மத்தியில் பிரபலமடைந்த சிங்கள திரைப்படங்களான ‘இனியவன்’, ‘சுனாமி’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இனியவன் படத்துக்காக விருதுகளையும் அவர் வென்றுள்ளார். அத்துடன், இலங்கையில் உருவான கோமாளி கிங்ஸ் என்ற பிரபல தமிழ் மொழி திரைப்படத்திலும் தர்ஷன் தர்மராஜ் நடித்துள்ளார். இறுதியாக அவர், ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், ‘ரெல்ல வெரல்லட் ஆதரே’ என்ற தொலைக்காட்சி தொடரில், ஜெயராஜ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துவந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

2063ல் நாட்டின் முதியோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்படும்

மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், அடுத்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் வடிவத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு தலைமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2063 ஆம் ஆண்டளவில், இலங்கையில்...

NDIS அமைப்பிலிருந்து விலக்கப்படும் செரிமானக் கோளாறுகள் உள்ள குழந்தைகள்

இரைப்பை குடல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை NDIS அமைப்பிலிருந்து அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திருத்தங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட...

AUKUS ஒப்பந்தத்தின் கீழ் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான திட்டங்கள்

AUKUS ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான புதுமை மற்றும் செலவுத் திட்டங்களை அறிமுகப்படுத்த முத்தரப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்படி, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா...

ஆஸ்திரேலிய எல்லைப் படைகளின் பிடியில் இருந்து அகதிகள் படகு ஒன்று தப்பியது

அவுஸ்திரேலிய கடற்படை எல்லைப் படையில் இருந்து 12 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மேற்கு...

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை விளம்பரங்களை ஆய்வு செய்த...

இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்!

சம்பள தகராறு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான விக்டோரியா காவல்துறை மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் விக்டோரியா பொலிஸ்...