Newsநிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள்

நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள்

-

ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவலட வெளியாகியுள்ளது.

அவர்கள் 2025ஆம் ஆண்டுக்குள் நிலவில் செடிகளை வளர்க்கத் திட்டமிடுகின்றனர். அந்தத் திட்டம் எதிர்காலத்தில் நிலவில் மனிதச் சமூகம் வாழ்வதற்கு வகைசெய்யும் என்று கூறப்படுகிறது.

குவீன்ஸ்லந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செடிகளுக்கான உயிரியல் ஆய்வாளரான பிரெட் வில்லியம்ஸ் (Brett WIlliams) திட்டத்தைப் பற்றி மேலும் விவரித்தார்.

Beresheet 2 எனும் தனியார் இஸ்ரேலிய உந்துகணை விதைகளை நிலவுக்குக் கொண்டுசெல்லும். நிலவுக்குச் சென்றபின் மூடிவைக்கப்பட்ட அறையில் விதைகளுக்கு நீர் அளிக்கப்படும். அவை செடிகளாக வளர்கின்றனவா என்பது கண்காணிக்கப்படும்.

சிறப்பாக வளரும் செடிகள் தேந்தெடுக்கப்படும். புதிய திட்டத்தில், ஆஸ்திரேலியாவில் நீரின்றி உயிர்வாழக்கூடிய “resurrection grass” என்ற செடி நிலவுக்கு அனுப்பப்படுவதற்காக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மனித வாழ்வுக்குத் தேவையான உணவு, மருந்து, உயிர்வாயு போன்றவற்றைச் செடிகள் அளிக்கக்கூடியவை. மனிதர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான செடிகளை நிலவில் வளர்க்கப் புதியத் திட்டம் வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Latest news

சமூக ஊடகத் தடைக்கு எதிராக வழக்குத் தொடரத் தயார்!

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடையை எதிர்த்து வழக்குத் தொடர நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தயாராகி வருகிறார். சமூக ஊடகத் தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற சவாலைத் தொடங்க...

ஆஸ்திரேலியாவின் அரச திருமணம் நவம்பரில் நடக்குமா?

ஆஸ்திரேலியாவின் "அரச திருமணத்திற்கான" கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அவரது காதலி ஜோடி ஹேடன் ஆகியோர் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்வதாக...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...

குடிபோதையில் வாகனம் ஓட்டிய விக்டோரியா மேயர்

விக்டோரியாவின் Macedon Ranges மேயர் டொமினிக் போனன்னோ, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அக்டோபர் 31 ஆம் திகதி மெல்பேர்ணில் உள்ள McGeorge சாலையில் அவர்...

சர்வதேச அளவில் பாராட்டைப் பெறும் ஆஸ்திரேலியாவின் முதல் பழங்குடி ஒப்பந்தம்

விக்டோரியா அரசாங்கத்திற்கும் பழங்குடித் தலைவர்களுக்கும் இடையே கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் பழங்குடி மக்களுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தில் விக்டோரியா கையெழுத்திட்டுள்ளது. ஐக்கிய...