Newsசிட்னியில் வெள்ள எச்சரிக்கை - மக்களை வெளியேறுமாறு உத்தரவு

சிட்னியில் வெள்ள எச்சரிக்கை – மக்களை வெளியேறுமாறு உத்தரவு

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ள அபாயம் இருப்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றுமாறு ஆஸ்திரேலிய அவசரச் சேவைகள் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

தாழ்வான நிலப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புப் பேட்டைகளிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு வெள்ளத்திலிருந்து 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சாலைகளின் வழியாகப் பயணம் செய்வது ஆபத்தானது என்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் நியூசௌத் வேல்ஸின் அவசரச் சேவைப் பிரிவு ஆணையர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே மழைப்பொழிவு குறைந்துள்ள வேளையிலும், வெள்ள நீர் தொடர்ச்சியாக ஆறுகளில் சென்று கலப்பதாக மாநிலத்தின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

Latest news

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...