Newsசிட்னியில் வெள்ள எச்சரிக்கை - மக்களை வெளியேறுமாறு உத்தரவு

சிட்னியில் வெள்ள எச்சரிக்கை – மக்களை வெளியேறுமாறு உத்தரவு

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ள அபாயம் இருப்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றுமாறு ஆஸ்திரேலிய அவசரச் சேவைகள் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

தாழ்வான நிலப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புப் பேட்டைகளிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு வெள்ளத்திலிருந்து 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சாலைகளின் வழியாகப் பயணம் செய்வது ஆபத்தானது என்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் நியூசௌத் வேல்ஸின் அவசரச் சேவைப் பிரிவு ஆணையர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே மழைப்பொழிவு குறைந்துள்ள வேளையிலும், வெள்ள நீர் தொடர்ச்சியாக ஆறுகளில் சென்று கலப்பதாக மாநிலத்தின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...