News சிட்னியில் வெள்ள எச்சரிக்கை - மக்களை வெளியேறுமாறு உத்தரவு

சிட்னியில் வெள்ள எச்சரிக்கை – மக்களை வெளியேறுமாறு உத்தரவு

-

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ள அபாயம் இருப்பதால் அந்தப் பகுதியில் இருக்கும் குடியிருப்பாளர்களை வெளியேற்றுமாறு ஆஸ்திரேலிய அவசரச் சேவைகள் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

தாழ்வான நிலப்பகுதிகளில் இருக்கும் குடியிருப்புப் பேட்டைகளிலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்றுவது குறித்து பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு வெள்ளத்திலிருந்து 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சாலைகளின் வழியாகப் பயணம் செய்வது ஆபத்தானது என்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்றும் நியூசௌத் வேல்ஸின் அவசரச் சேவைப் பிரிவு ஆணையர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே மழைப்பொழிவு குறைந்துள்ள வேளையிலும், வெள்ள நீர் தொடர்ச்சியாக ஆறுகளில் சென்று கலப்பதாக மாநிலத்தின் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

Latest news

ஆபத்தான வைரஸ் பற்றி NSW குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது. உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றம் மூலம் பரவும்...

பல குயின்ஸ்லாந்து பிராந்தியங்களில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது

பிரிஸ்பேன் உட்பட குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை வரலாறு காணாத மதிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு லீற்றர்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் 5.2% உயர்வு

அவுஸ்திரேலியாவில் 04 மாதங்களாக குறைந்திருந்த பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட்...

விக்டோரியாவின் பிரீமியர் பதவிக்கு கடுமையான போராட்டம் – ஜெசிந்தா ஆலன் முன்னிலையில்

இன்று மாலை 5.00 மணிக்குப் பின்னர் காலியாகவுள்ள விக்டோரியா பிரீமியர் பதவிக்கு விக்டோரியா தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல்...

குயின்ஸ்லாந்து Go Card வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன், GO கார்டு பயனர்கள் தங்கள் நிலுவைகளை திரும்பப் பெறுமாறு...

மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சிரமங்கள்

மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பின் கீழ்,...