ஆஸ்திரேலியாவில் இலங்கையர் தலைமையிலான குழுவிற்கு 180 மில்லிய டொலர் பணப்பரிசு ஒன்று கிடைத்துள்ளது.
ஒருவரது இருமல் சத்தத்தை கேட்டு அவருக்கு கோவிட் தொற்று உள்ளதா என்பதை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்ட கையடக்க தொலைபேசி செயலிக்காக பிரபல பைசர் நிறுவனம் 180 மில்லியன் டொலர்களுக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் உதாந்த அபேரத்ன என்ற இலங்கையர் தலைமையிலான ஆய்வுக் குழுவினால் இந்த கண்டுபிடிப்பு மேற்கொளள்ப்பட்டுள்ளது.
இந்த கையடக்க தொலைபேசி செயலியை ResApp Health Limited உருவாக்கியது மற்றும் அதன் வெற்றியை சோதித்த பிறகு, Pfizer அதற்கு 180 மில்லிய டொலர் வழங்கியுள்ளது.