Newsசர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக்...

சர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக் அருட்பிரகாசம்

-

அனுக் அருட்பிரகாசம்1988 ஆம் ஆண்டு பிறந்த இலங்கையை சேர்ந்த 32 வயது ஆங்கில எழுத்தாளர்.

தமிழிலும் எழுதுபவர். தமிழ் ஈழப் போராட்ட வாழ்வியலை வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பேசும் ஆங்கிலத்தில் இவரது எழுத்துகள் சர்வதேசப் பார்வை கொண்டவை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய ஆங்கில நாவல்களின் மூலம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்துள்ள ஈழத் தமிழரான அனுக் அருட்பிரகாசம் ஆங்கில எழுத்தின் மூலம் உலகக் கவனத்தை ஈர்க்கும் இளைய சக்தியாக வளர்ந்து வருகிறார்.

எனது நண்பரும் ஜெர்மானிய எழுத்தாளருமான சாஸா ஸ்டானிசிக் போல தங்களது உள்நாட்டுப் போரைச் சுற்றி பின்னப்பட்ட கதைகளின் மூலம் இலக்கியத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார்.
2016இல் வெளிவந்த இவரது The Story of a Brief Marriage எனும் ஆங்கில நாவல் பிரெஞ்சு, ஜெர்மன், செக், மாண்டரின் சீனம், டச்சு, இத்தாலி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நாவல் 2009இல் நிகழ்ந்த ஈழத்தின் இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரை, மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ”இது “ அப்பாவிகளுக்கும் வரலாற்றில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நாவல்” என்றும் “மனிதகுலத்தின் மாண்பின் முன்னால் மண்டியிட வைக்கிறது “ என்றும் The New York Times இதழால் பாராட்டப்பட்டது. ”2016இல் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்” என்று The Wall Street Journal, NPR, Financial Times. இதழ்களால் கணிக்கப்பட்டது.

இவரது இரண்டாவது நாவலான A Passage North (2021) என்பது ஈழத்தின் உள்நாட்டுப் போரின் வன்முறைகளைப் பேசும் ஒரு நாவல்.

இவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் நியூயார்க், டொரொண்ட்டோ ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர்ந்த அம்மாக்கள், மகள்கள் பற்றியதாக அமைகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...