Newsசர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக்...

சர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக் அருட்பிரகாசம்

-

அனுக் அருட்பிரகாசம்1988 ஆம் ஆண்டு பிறந்த இலங்கையை சேர்ந்த 32 வயது ஆங்கில எழுத்தாளர்.

தமிழிலும் எழுதுபவர். தமிழ் ஈழப் போராட்ட வாழ்வியலை வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பேசும் ஆங்கிலத்தில் இவரது எழுத்துகள் சர்வதேசப் பார்வை கொண்டவை.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்று கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் எழுதிய ஆங்கில நாவல்களின் மூலம் சர்வதேச கவனத்தைக் கவர்ந்துள்ள ஈழத் தமிழரான அனுக் அருட்பிரகாசம் ஆங்கில எழுத்தின் மூலம் உலகக் கவனத்தை ஈர்க்கும் இளைய சக்தியாக வளர்ந்து வருகிறார்.

எனது நண்பரும் ஜெர்மானிய எழுத்தாளருமான சாஸா ஸ்டானிசிக் போல தங்களது உள்நாட்டுப் போரைச் சுற்றி பின்னப்பட்ட கதைகளின் மூலம் இலக்கியத்தில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார்.
2016இல் வெளிவந்த இவரது The Story of a Brief Marriage எனும் ஆங்கில நாவல் பிரெஞ்சு, ஜெர்மன், செக், மாண்டரின் சீனம், டச்சு, இத்தாலி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்நாவல் 2009இல் நிகழ்ந்த ஈழத்தின் இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரை, மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. ”இது “ அப்பாவிகளுக்கும் வரலாற்றில் ஒரு இடத்தைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு நாவல்” என்றும் “மனிதகுலத்தின் மாண்பின் முன்னால் மண்டியிட வைக்கிறது “ என்றும் The New York Times இதழால் பாராட்டப்பட்டது. ”2016இல் வெளிவந்த மிகச் சிறந்த நாவல்” என்று The Wall Street Journal, NPR, Financial Times. இதழ்களால் கணிக்கப்பட்டது.

இவரது இரண்டாவது நாவலான A Passage North (2021) என்பது ஈழத்தின் உள்நாட்டுப் போரின் வன்முறைகளைப் பேசும் ஒரு நாவல்.

இவர் தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் நியூயார்க், டொரொண்ட்டோ ஆகிய இடங்களில் வாழும் புலம்பெயர்ந்த அம்மாக்கள், மகள்கள் பற்றியதாக அமைகிறது.

Latest news

14-மணிநேர Optus செயலிழப்பிற்கு பண இழப்பீடு வழங்க முடிவு

கடந்த நவம்பர் 8ஆம் திகதி சுமார் 14 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட சேவைத் தோல்வியால் சிரமத்துக்குள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளதாக Optus Communications...

ஓய்வூதிய பலன் தாமதங்கள் குறித்த செனட் விசாரணை

ஓய்வூதிய பலன்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரணை நடத்த செனட் நகர்ந்துள்ளது. குறிப்பாக பழைய கருணைத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையை செலுத்தாதது தொடர்பான புகார்களின்...

9/10 ஆஸ்திரேலியர்கள் பூர்வீக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கூறுகிறார்கள்

பழங்குடியின மக்கள் வாக்கெடுப்பு தோல்வியடைந்தாலும், பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 10...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த ஊதிய உயர்வு உள்ள துறைகள் இதோ!

கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த சம்பள அதிகரிப்புகளை கொண்ட துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான வேலைகளில் சம்பளம் 08...