Newsஜனனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

ஜனனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

-

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். ஏனெனில் அப்போதுதான் புலம் பெயர் இலங்கையர்களும் நிகழ்வை ஆர்வமுடன் பார்ப்பார்கள் என விஜய் டிவி கணித்துள்ளது.

அவர்கள்து கணிப்பை இதுவரை புலம்பெயர் தமிழர்கள் பொய்யாக்கியதுஇல்லை. அந்தவகையில் லாஸ்லியா தர்சனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிக்பாஸ் 6 இல் களம் இறங்கியுள்ளார்.

நிகழ்ச்சிக்குள் நுழைந்த அன்றே ரசிகர்கள் பலரின் கவனத்தை ஜனனி ஈர்த்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

யார் இந்த ஜனனி?

21 வயதான ஜனனி குணசீலன் இலங்கையின் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 18.3k பின் தொடர்வதுடன் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

அதேவேளை இலங்கையில் பாரம்பரியத்திற்கும் பெருமைக்கும் பெயர் போன யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜனனி, தமிழ் சினிமா மற்றும் சிறிய திரை தொலைக்காட்சி துறையில் நன்கு அறியப்பட்ட கலைஞர்களுடன், அவர்களுக்கு பரிட்சயமே இல்லாத ஜனனி போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேவேளை லாஸ்லியாவை கொண்டாடியதுபோல தற்போதே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். அதுமட்டுமல்லாது ஜனனியின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அழகில் லாஸ்லியாவையே தூக்கி அடித்துவிடுவார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...