Newsஜனனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

ஜனனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

-

விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். ஏனெனில் அப்போதுதான் புலம் பெயர் இலங்கையர்களும் நிகழ்வை ஆர்வமுடன் பார்ப்பார்கள் என விஜய் டிவி கணித்துள்ளது.

அவர்கள்து கணிப்பை இதுவரை புலம்பெயர் தமிழர்கள் பொய்யாக்கியதுஇல்லை. அந்தவகையில் லாஸ்லியா தர்சனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிக்பாஸ் 6 இல் களம் இறங்கியுள்ளார்.

நிகழ்ச்சிக்குள் நுழைந்த அன்றே ரசிகர்கள் பலரின் கவனத்தை ஜனனி ஈர்த்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

யார் இந்த ஜனனி?

21 வயதான ஜனனி குணசீலன் இலங்கையின் புகழ்பெற்ற யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் டிக்டாக் மூலம் சமூக வலையத்தளங்களில் பிரபலமாகியதோடு, சில குறும்படங்களிலும் நடித்ததுடன், ஐபிசி தமிழ் சேனலில் தொகுப்பாளராக இருந்தார்.

இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 18.3k பின் தொடர்வதுடன் இவர் இலங்கையில் ஒரு மாடலாகவும் இருந்து வருகிறார்.

அதேவேளை இலங்கையில் பாரம்பரியத்திற்கும் பெருமைக்கும் பெயர் போன யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜனனி, தமிழ் சினிமா மற்றும் சிறிய திரை தொலைக்காட்சி துறையில் நன்கு அறியப்பட்ட கலைஞர்களுடன், அவர்களுக்கு பரிட்சயமே இல்லாத ஜனனி போட்டியிட்டு நாட்டிற்கு பெருமை சேர்ப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதேவேளை லாஸ்லியாவை கொண்டாடியதுபோல தற்போதே ஜனனிக்கு ஆர்மி தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். அதுமட்டுமல்லாது ஜனனியின் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அழகில் லாஸ்லியாவையே தூக்கி அடித்துவிடுவார் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...