Newsஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு வெளியான தகவல்

-

ஆஸ்திரேலியாவில் புதிதாக குழந்தை பெறும் பெற்றோருக்கு ஆறு மாத ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு உரிமைகளை படிப்படியாக அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் இன்றைய தினம் அறிவித்துள்ளது.

பெற்றோர் விடுப்பு ஆறு வாரங்கள் நீட்டிக்கப்படும், படிப்படியாக 2026 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 26 வாரங்களாக அறிவிக்கப்படவுள்ளது.

பணியின் இடைப்பட்ட கால இடைவெளியில் விடுப்பு எடுக்க முடியும். ஒற்றைப் பெற்றோருக்கு முழுவதுமான 26 வாரங்களுக்கும் விடுப்பிற்கு உரிமை உண்டு.

தற்போதுள்ள திட்டத்திற்கமைய, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிக்க 18 வாரங்கள் அரசு நிதியுதவியுடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகின்றது.

இரண்டு வாரங்களுக்கு அப்பாவுக்கான ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் நடைமுறை அமுலில் உள்ளது.

அடுத்த ஆண்டு ஜூலை முதல் இந்த அமைப்பை நவீனமயமாக்கவும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...