Newsஇலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

-

நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனைத் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்று சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு தாம் வலியுறுத்தினார் என்று மனோ கணேசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பில் உரையாடினோம். ஆஸ்திரேலியாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம் பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனுக்குத் தெரிவித்தேன்.
குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள சிங்கள ஆஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ வேண்டுமென வலியுறுத்தினேன்.

இலங்கையின் நெருக்கடி நிலைமையும், அதற்கான மாற்றமும் வெறுமனே பொருளாதார விடயங்களை சார்ந்தது அல்ல என்ற எமது நிலைபாட்டை அவருக்கு வலியுறுத்தினேன்.

பொருளாதார விடயங்களுக்கு அப்பால், மூல காரணமாக திகழ்வது இலங்கையில் பன்மைத்துவ கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமையே என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை அவருக்கு சுட்டிக்காட்டினேன். ஆகவே, இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் இலங்கை பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற பன்மைத்துவ கொள்கை அரசமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலேயே தங்கியுள்ளது. அதுவே மாற்றத்துக்கான ஆரம்பப்புள்ளி எனத் தெளிவுபடுத்தினேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, மலையகத் தமிழர்கள், மிகவும் பின்தங்கிய தோட்டத் தொழிலாளர்கள், நடைபெற்ற அரகலய கிளர்ச்சி, எதிர்க்கட்சிகளின் உடனடித் தேர்தலுக்கான கோரிக்கை ஆகியவை பற்றியும் உரையாடினோம்.” – எனவும் மனோ குறிப்பிட்டார்.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...