Newsஇலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

-

நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவரிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.

இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனைத் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்று சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு தாம் வலியுறுத்தினார் என்று மனோ கணேசன் எம்.பி. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பில் உரையாடினோம். ஆஸ்திரேலியாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம் பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனுக்குத் தெரிவித்தேன்.
குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள சிங்கள ஆஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ வேண்டுமென வலியுறுத்தினேன்.

இலங்கையின் நெருக்கடி நிலைமையும், அதற்கான மாற்றமும் வெறுமனே பொருளாதார விடயங்களை சார்ந்தது அல்ல என்ற எமது நிலைபாட்டை அவருக்கு வலியுறுத்தினேன்.

பொருளாதார விடயங்களுக்கு அப்பால், மூல காரணமாக திகழ்வது இலங்கையில் பன்மைத்துவ கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமையே என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை அவருக்கு சுட்டிக்காட்டினேன். ஆகவே, இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் இலங்கை பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற பன்மைத்துவ கொள்கை அரசமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலேயே தங்கியுள்ளது. அதுவே மாற்றத்துக்கான ஆரம்பப்புள்ளி எனத் தெளிவுபடுத்தினேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, மலையகத் தமிழர்கள், மிகவும் பின்தங்கிய தோட்டத் தொழிலாளர்கள், நடைபெற்ற அரகலய கிளர்ச்சி, எதிர்க்கட்சிகளின் உடனடித் தேர்தலுக்கான கோரிக்கை ஆகியவை பற்றியும் உரையாடினோம்.” – எனவும் மனோ குறிப்பிட்டார்.

Latest news

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியன் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் BTS இன் மெகா நிகழ்ச்சி

K-pop சூப்பர் குழுவான BTS, எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் 79 நிகழ்ச்சிகள் கொண்ட ஒரு பெரிய உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிகழ்ச்சி...

புதிய சட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள கார்களின் விலைகள்

புதிய கார் உமிழ்வு கொள்கை காரணமாக, பிரபலமான UTE, 4WD மற்றும் SUV வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அல்பேனிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய...

புதிய சட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள கார்களின் விலைகள்

புதிய கார் உமிழ்வு கொள்கை காரணமாக, பிரபலமான UTE, 4WD மற்றும் SUV வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அல்பேனிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய...

அடுத்த சில இரவுகளில் மெல்பேர்ண் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள்

அடுத்த சில இரவுகளில் மெல்பேர்ண் முழுவதும் "குறிப்பிடத்தக்க" போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கிறது. இது 55 மீட்டர் நீளமும் 4.5 மீட்டர் அகலமும்...