Cinemaபடக்குழுவிற்கு அதிர்ச்சி - தீபாவளி படங்களால் ஓரங்கட்டப்படும் பொன்னியின் செல்வன்

படக்குழுவிற்கு அதிர்ச்சி – தீபாவளி படங்களால் ஓரங்கட்டப்படும் பொன்னியின் செல்வன்

-

தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு வெளியாகும் புதிய படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று திரையிடப்படும் பொன்னியின் செல்வன் நீக்கப்படுகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட திரையரங்குக உரிமையாளர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடித்துள்ள சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

இதில் சர்தார் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் நேரடியாக வெளியிடுகிறது. அதேபோல் பிரின்ஸ் திரைப்படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார். ஆனால் இந்தப் படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுகிறது என திரைத்துறையில் கூறுகின்றனர்.

இந்த இரண்டு திரைப்படங்களையும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட முயற்சிகள் நடைபெறுகின்றன. அதில் பெரும்பாலான திரையரங்குகளின் ஒப்பந்தமும் முடிவடைந்துள்ளது.

கடந்த 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றியடைந்தது. அந்த திரைப்படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயின் நிறுவனமே வெளியிட்டு இருந்தது.

பொன்னியின் செல்வன் Distribution அடிப்படையில் வெளியிடப்பட்டது. அதற்காக வசூல் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி முதல் வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 25 சதவீதம், விநியோகஸ்தருக்கு 75 சதவீதம். இரண்டாவது வாரம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 30 சதவீதம் விநியோகஸ்தருக்கு 70 சதவீதம். மூன்றாவது வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் மற்றும் விநியோகஸ்தருக்கு 65 சதவீதம் என திரையிடப்பட்டது. அதேபோல் நான்காவது வாரத்தில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு 40 சதவீதம் விநியோகஸ்தருக்கு 60 சதவீதம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டது. அந்த வகையில் தீபாவளி சமயம்தான் பொன்னியின் செல்வனின் நான்காவது வாரம். எனவே, தமிழகத்தில் உள்ள சுமார் 100 திரையரங்குகள் பொன்னியின் செல்வன் படத்தை திரையிட விருப்பம் தெரிவித்தனர். ஏனென்றால், அந்த வாரத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக பங்கு கிடைக்கும். இது லாபகரமாக இருக்கும் என எண்ணினர்.

ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் படங்களைதான் திரையிட வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர் என்று பெயர் கூற விரும்பாத சில திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் அழுத்ததிற்கு உடன்பட்டு பெரும்பாலான திரையரங்குகள் தீபாவளி படங்களை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவின் முதல் எண் இல்லாத கிரெடிட்/டெபிட் கார்டு

ஆஸ்திரேலிய வங்கிகளில் முதன்மையான AMP, வரலாற்றில் முதல் முறையாக எண்ணற்ற கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு பதிலாக AMP ஒரு...

லிபியா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 50 புலம்பெயர்ந்தோர்களின் உடல்கள்

லிபியாவில் உள்ள ஒரு பாலைவனத்தில் கிட்டத்தட்ட 50 புலம்பெயர்ந்தோரின் உடல்களைக் கொண்ட இரண்டு வெகுஜன புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும்...

பெரும் நெருக்கடியில் உள்ள ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்கள்

ஓய்வு பெற்ற ஆஸ்திரேலியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வறுமையில் வாடுவதாகவும், அவர்களின் வீட்டு உரிமை குறைந்துள்ளதாகவும் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. ஏழைகளில் முக்கால்வாசி பேர்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் முட்டை தட்டுப்பாடு

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காரணம், விக்டோரியாவில் உள்ள ஒரு பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியது. இதன் விளைவாக,...

மெல்பேர்ண் லாட்டரி மில்லியனர் நீங்களா?

மெல்பேர்ணில் $2.5 மில்லியன் லாட்டரி பரிசின் உரிமையாளர் இன்னும் முன்வரவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்ட டாட்ஸ்லோட்டோ டிக்கெட், மல்கிரேவில் உள்ள ஜாக்சன்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் முட்டை தட்டுப்பாடு

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளில் முட்டை தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காரணம், விக்டோரியாவில் உள்ள ஒரு பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியது. இதன் விளைவாக,...