Cinemaபடக்குழுவிற்கு அதிர்ச்சி - தீபாவளி படங்களால் ஓரங்கட்டப்படும் பொன்னியின் செல்வன்

படக்குழுவிற்கு அதிர்ச்சி – தீபாவளி படங்களால் ஓரங்கட்டப்படும் பொன்னியின் செல்வன்

-

தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு வெளியாகும் புதிய படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று திரையிடப்படும் பொன்னியின் செல்வன் நீக்கப்படுகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட திரையரங்குக உரிமையாளர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடித்துள்ள சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

இதில் சர்தார் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் நேரடியாக வெளியிடுகிறது. அதேபோல் பிரின்ஸ் திரைப்படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார். ஆனால் இந்தப் படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுகிறது என திரைத்துறையில் கூறுகின்றனர்.

இந்த இரண்டு திரைப்படங்களையும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட முயற்சிகள் நடைபெறுகின்றன. அதில் பெரும்பாலான திரையரங்குகளின் ஒப்பந்தமும் முடிவடைந்துள்ளது.

கடந்த 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றியடைந்தது. அந்த திரைப்படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயின் நிறுவனமே வெளியிட்டு இருந்தது.

பொன்னியின் செல்வன் Distribution அடிப்படையில் வெளியிடப்பட்டது. அதற்காக வசூல் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி முதல் வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 25 சதவீதம், விநியோகஸ்தருக்கு 75 சதவீதம். இரண்டாவது வாரம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 30 சதவீதம் விநியோகஸ்தருக்கு 70 சதவீதம். மூன்றாவது வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் மற்றும் விநியோகஸ்தருக்கு 65 சதவீதம் என திரையிடப்பட்டது. அதேபோல் நான்காவது வாரத்தில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு 40 சதவீதம் விநியோகஸ்தருக்கு 60 சதவீதம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டது. அந்த வகையில் தீபாவளி சமயம்தான் பொன்னியின் செல்வனின் நான்காவது வாரம். எனவே, தமிழகத்தில் உள்ள சுமார் 100 திரையரங்குகள் பொன்னியின் செல்வன் படத்தை திரையிட விருப்பம் தெரிவித்தனர். ஏனென்றால், அந்த வாரத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக பங்கு கிடைக்கும். இது லாபகரமாக இருக்கும் என எண்ணினர்.

ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் படங்களைதான் திரையிட வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர் என்று பெயர் கூற விரும்பாத சில திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் அழுத்ததிற்கு உடன்பட்டு பெரும்பாலான திரையரங்குகள் தீபாவளி படங்களை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

Latest news

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

விக்டோரியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ

வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ நிலைமை காரணமாக, விக்டோரியாவின் Upper Murray பகுதியில் வசிப்பவர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரு தேசிய பூங்காவிற்கு அருகில் 1,200 ஹெக்டேர் பரப்பளவில்...

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டதால் தேசிய சரக்கு வழித்தடங்கள் பாதிப்பு

செவ்வாய்க்கிழமை பிற்பகல் Port Pirie அருகே பல ரயில் பெட்டிகள் தடம் புரண்டதை அடுத்து, நாட்டை இணைக்கும் முக்கிய சரக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பகுதியளவு தடம் புரண்டதாக...