Cinemaபடக்குழுவிற்கு அதிர்ச்சி - தீபாவளி படங்களால் ஓரங்கட்டப்படும் பொன்னியின் செல்வன்

படக்குழுவிற்கு அதிர்ச்சி – தீபாவளி படங்களால் ஓரங்கட்டப்படும் பொன்னியின் செல்வன்

-

தமிழ் சினிமாவில் தீபாவளிக்கு வெளியாகும் புதிய படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று திரையிடப்படும் பொன்னியின் செல்வன் நீக்கப்படுகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட திரையரங்குக உரிமையாளர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர் என கூறப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு கார்த்தி நடித்துள்ள சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன.

இதில் சர்தார் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் நேரடியாக வெளியிடுகிறது. அதேபோல் பிரின்ஸ் திரைப்படத்தை மதுரை அன்புச் செழியன் வெளியிடுகிறார். ஆனால் இந்தப் படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடுகிறது என திரைத்துறையில் கூறுகின்றனர்.

இந்த இரண்டு திரைப்படங்களையும் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட முயற்சிகள் நடைபெறுகின்றன. அதில் பெரும்பாலான திரையரங்குகளின் ஒப்பந்தமும் முடிவடைந்துள்ளது.

கடந்த 30ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றியடைந்தது. அந்த திரைப்படத்தையும் மறைமுகமாக ரெட் ஜெயின் நிறுவனமே வெளியிட்டு இருந்தது.

பொன்னியின் செல்வன் Distribution அடிப்படையில் வெளியிடப்பட்டது. அதற்காக வசூல் குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி முதல் வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 25 சதவீதம், விநியோகஸ்தருக்கு 75 சதவீதம். இரண்டாவது வாரம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 30 சதவீதம் விநியோகஸ்தருக்கு 70 சதவீதம். மூன்றாவது வாரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் மற்றும் விநியோகஸ்தருக்கு 65 சதவீதம் என திரையிடப்பட்டது. அதேபோல் நான்காவது வாரத்தில் இருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு 40 சதவீதம் விநியோகஸ்தருக்கு 60 சதவீதம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பொன்னியின் செல்வன் திரையிடப்பட்டது. அந்த வகையில் தீபாவளி சமயம்தான் பொன்னியின் செல்வனின் நான்காவது வாரம். எனவே, தமிழகத்தில் உள்ள சுமார் 100 திரையரங்குகள் பொன்னியின் செல்வன் படத்தை திரையிட விருப்பம் தெரிவித்தனர். ஏனென்றால், அந்த வாரத்தில்தான் திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிக பங்கு கிடைக்கும். இது லாபகரமாக இருக்கும் என எண்ணினர்.

ஆனால் தீபாவளிக்கு வெளியாகும் படங்களைதான் திரையிட வேண்டும் என சிலர் அழுத்தம் கொடுக்கின்றனர் என்று பெயர் கூற விரும்பாத சில திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். அத்துடன் அழுத்ததிற்கு உடன்பட்டு பெரும்பாலான திரையரங்குகள் தீபாவளி படங்களை ஒப்பந்தம் செய்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...