Newsதண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

தண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

-

இணையத் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும் சம்பவங்களில் நிறுவனங்களுக்கு எதிரான தண்டனையை அதிகரிக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது.

கடந்த சில வாரங்களில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு, நிதி, அரசாங்கத்துறைகள் உச்ச விழிப்புநிலையில் உள்ளன. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் Singtel நிறுவனத்துக்குச் சொந்தமான Optus நிறுவனம் இணையத் தாக்குதலுக்கு இலக்கானது.

சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டன. இம்மாதம் ஆஸ்திரேலியாவின் சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibank Private இணையத் தாக்குதலுக்கு ஆளானது.

100 வாடிக்கையாளர்களின் மருத்துவ விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடுபோயின.தனிப்பட்ட விவரங்கள் களவாடப்படும் நிறுவனங்களுக்குச் சுமார் இரண்டே கால் மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அதை 50 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை உயர்த்தத் திட்டமிடப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு வாங்கும்போது அதைப் பாதுகாப்பது நிறுவனத்தின் கடமை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...