Newsதண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

தண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

-

இணையத் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும் சம்பவங்களில் நிறுவனங்களுக்கு எதிரான தண்டனையை அதிகரிக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது.

கடந்த சில வாரங்களில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு, நிதி, அரசாங்கத்துறைகள் உச்ச விழிப்புநிலையில் உள்ளன. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் Singtel நிறுவனத்துக்குச் சொந்தமான Optus நிறுவனம் இணையத் தாக்குதலுக்கு இலக்கானது.

சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டன. இம்மாதம் ஆஸ்திரேலியாவின் சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibank Private இணையத் தாக்குதலுக்கு ஆளானது.

100 வாடிக்கையாளர்களின் மருத்துவ விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடுபோயின.தனிப்பட்ட விவரங்கள் களவாடப்படும் நிறுவனங்களுக்குச் சுமார் இரண்டே கால் மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அதை 50 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை உயர்த்தத் திட்டமிடப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு வாங்கும்போது அதைப் பாதுகாப்பது நிறுவனத்தின் கடமை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...