Newsதண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

தண்டனைகளை அதிகரிக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியா!

-

இணையத் தாக்குதலில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படும் சம்பவங்களில் நிறுவனங்களுக்கு எதிரான தண்டனையை அதிகரிக்க ஆஸ்திரேலியா திட்டமிடுகிறது.

கடந்த சில வாரங்களில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலிய மக்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு, நிதி, அரசாங்கத்துறைகள் உச்ச விழிப்புநிலையில் உள்ளன. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் Singtel நிறுவனத்துக்குச் சொந்தமான Optus நிறுவனம் இணையத் தாக்குதலுக்கு இலக்கானது.

சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டன. இம்மாதம் ஆஸ்திரேலியாவின் சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibank Private இணையத் தாக்குதலுக்கு ஆளானது.

100 வாடிக்கையாளர்களின் மருத்துவ விவரம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடுபோயின.தனிப்பட்ட விவரங்கள் களவாடப்படும் நிறுவனங்களுக்குச் சுமார் இரண்டே கால் மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அதை 50 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் வரை உயர்த்தத் திட்டமிடப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டு வாங்கும்போது அதைப் பாதுகாப்பது நிறுவனத்தின் கடமை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியது.

Latest news

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

இரண்டாவது முறையாக தென்பட்ட சுறா மீன்கள் – மீண்டும் மூடப்பட்ட சிட்னி கடற்கரை

ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில்...