Newsஆஸ்திரேலியாவின் மோசமாகி வரும் வெள்ள நிலவரம் - ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்

ஆஸ்திரேலியாவின் மோசமாகி வரும் வெள்ள நிலவரம் – ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்

-

ஆஸ்திரேலியாவில் வெள்ள நிலவரம் மோசமடைந்து வருகிறது. நாட்டின் கிழக்குப் பகுதி உச்ச விழிப்பு நிலையில் உள்ளது.

வெள்ளம் புகுந்ததால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மூன்று வாரங்களாக ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்து வருகிறது. நிலைமை மோசமானால் ஆறுகள் கரைகளை உடைத்துப் பாயும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களில் உள்ள 200 இடங்களில் வெள்ள எச்சரிக்கை நடப்பில் உள்ளது.

அந்த இரண்டு மாநிலங்களிலும் ஆயிரக் கணக்கான வீடுகளைச் சூழ்ந்துள்ளது வெள்ளம். பயங்கரமான சேதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் மாண்டனர்.

நிவாரணப் பணிகளைத் விரைவுபடுத்த 370 மில்லியன் டொலர் நிதி தனியே ஒதுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...