Newsஆஸ்திரேலியாவின் மோசமாகி வரும் வெள்ள நிலவரம் - ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்

ஆஸ்திரேலியாவின் மோசமாகி வரும் வெள்ள நிலவரம் – ஆயிரக் கணக்கானோர் வெளியேற்றம்

-

ஆஸ்திரேலியாவில் வெள்ள நிலவரம் மோசமடைந்து வருகிறது. நாட்டின் கிழக்குப் பகுதி உச்ச விழிப்பு நிலையில் உள்ளது.

வெள்ளம் புகுந்ததால் ஆயிரக் கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மூன்று வாரங்களாக ஆஸ்திரேலியாவில் கனத்த மழை பெய்து வருகிறது. நிலைமை மோசமானால் ஆறுகள் கரைகளை உடைத்துப் பாயும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா மாநிலங்களில் உள்ள 200 இடங்களில் வெள்ள எச்சரிக்கை நடப்பில் உள்ளது.

அந்த இரண்டு மாநிலங்களிலும் ஆயிரக் கணக்கான வீடுகளைச் சூழ்ந்துள்ளது வெள்ளம். பயங்கரமான சேதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். மழை, வெள்ளத்தில் சிக்கி 6 பேர் மாண்டனர்.

நிவாரணப் பணிகளைத் விரைவுபடுத்த 370 மில்லியன் டொலர் நிதி தனியே ஒதுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...