Newsதென் கொரியாவின் நடந்த பயங்கரம் - இலங்கையர் பலி

தென் கொரியாவின் நடந்த பயங்கரம் – இலங்கையர் பலி

-

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குறித்த இலங்கையர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான ஆண் ஒருவரென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதர்.

ஹிஸ்மாயில் முனவ்ஃபர் என்ற ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளுக்காக அவர் தென் கொரியாவுக்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, 23 ஆயிரம் இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.

அவர்களின் நிலை தொடர்பில் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் தலைநகர் சியோலில், இலங்கை நேரப்படி நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Latest news

முக்கிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளின் போது காலணிகளை அகற்ற வேண்டும் என்ற தேவை நீக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத் திருத்தத்தை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம்...

அமெரிக்காவில் மனிதாபிமானமின்றி செயல்படும் குடியேற்ற தடுப்பு மையம் 

அமெரிக்காவில் உள்ள ஒரு தற்காலிக தடுப்பு மையத்தில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயகக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் புளோரிடாவின்...

சீனாவின் எஃகுத் தொழிலுக்கு உதவ பிரதமர் அல்பானீஸ் பேச்சுவார்த்தை

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் சீனாவிற்கு விஜயம் செய்யும் இரண்டாவது நாள் நேற்று ஆகும். முன்னாள் Socceroos starஉம், சீன கிளப்பான ஷாங்காய் துறைமுகத்தின் தற்போதைய மேலாளருமான அவர்,...

ஊடகங்களில் வெளியான ஒரு ரகசிய அரசாங்க அறிக்கை

வரிகளை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து, நிதியமைச்சர் Jim Chalmers தற்செயலாக பத்திரிகையாளர்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியதாக ஊடக அறிக்கைகள் பரவி வருகின்றன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அரசாங்கம்...

உலக வல்லரசின் மீதான வரி உயர்வுக்குப் பிறகு டிரம்பை சந்திக்க ஆர்வமாக உள்ள ஆஸ்திரேலியா

மெக்ஸிகோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது டிரம்ப் புதிய வரிகளை விதிக்கும்போது, அவருடன் அரசாங்கம் ஈடுபட முயற்சிப்பதாக கருவூல செயலாளர் Jim Chalmers அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப்...

ஆசியாவின் வயதான யானை மரணம்

ஆசியாவின் வயதான யானையாகக் கருதப்படும் "வத்சலா" உயிரிழந்துள்ளது. வத்சலா இறக்கும் போது அவருக்கு 100 வயது ஆகும். வத்சலாவின் இறுதிச் சடங்குகள் இந்தியாவின் பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள...