Newsஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு - சமாளிக்க முடியாமல் திணறல்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சமாளிக்க முடியாமல் திணறல்

-

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வெண்ணெய் முதல் பால்மாவு வரை பால் பொருள்களுக்குப் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.

அளவுக்கு அதிகமான வெப்பமும் வறட்சியும் மாடுகளுக்கு மனவுளைச்சலை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அது குறித்து Bloomberg செய்தி நிறுவனம் தகவல் அளித்தது. அதிகரிக்கும் வெப்பநிலையால் பசுக்கள் குறைந்த பாலை உற்பத்தி செய்கின்றன..

வறட்சி, கடுமையான மழை ஆகியவற்றால் சாப்பிடக்கூடிய புல்லும் அவ்வளவாக இல்லை என கூறப்படுகின்றது.

உலகின் பால் உற்பத்தி வட்டாரங்கள் சிக்கலைச் எதிர்நோக்குகின்றன. அமெரிக்காவின் பால் பொருள் உற்பத்தித்துறை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆண்டுதோறும் 2.2 பில்லியன் டொலர் இழக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் முன்னுரைத்துள்ளனர்.

பால் பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் பண்ணையாளர்கள் சிலர் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தொழிலை விட்டு விலகுகின்றனர்.

அந்நாட்டில் பால் பொருள்களின் உற்பத்தி இவ்வாண்டு அரை மில்லியன் மெட்ரிக் டன் வரை குறையக்கூடும் என்று Bloomberg குறிப்பிட்டுள்ளது.

உலகில் ஆக அதிக அளவில் பாலை உற்பத்தி செய்யும் இந்தியா, உலகின் பால் பொருள்களில் கால்வாசியை வழங்குகிறது. அந்நாட்டில் பால் பெரும்பாலும் சிறு பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பண்ணையாளர்கள் வெப்பத்தைத் தணிக்கக் குளிரூட்டும் கருவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இருப்பினும் சிலருக்கு அது கட்டுப்படியான தெரிவு அல்ல.

Amul போன்ற மாபெரும் நிறுவனங்கள் இருப்பைப் பாதுகாப்பதற்கான சவாலைச் சந்திக்கின்றன. நிலைமை தொடர்ந்தால் வருங்காலத்தில் பால் பொருள்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...