Newsஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு - சமாளிக்க முடியாமல் திணறல்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சமாளிக்க முடியாமல் திணறல்

-

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வெண்ணெய் முதல் பால்மாவு வரை பால் பொருள்களுக்குப் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.

அளவுக்கு அதிகமான வெப்பமும் வறட்சியும் மாடுகளுக்கு மனவுளைச்சலை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அது குறித்து Bloomberg செய்தி நிறுவனம் தகவல் அளித்தது. அதிகரிக்கும் வெப்பநிலையால் பசுக்கள் குறைந்த பாலை உற்பத்தி செய்கின்றன..

வறட்சி, கடுமையான மழை ஆகியவற்றால் சாப்பிடக்கூடிய புல்லும் அவ்வளவாக இல்லை என கூறப்படுகின்றது.

உலகின் பால் உற்பத்தி வட்டாரங்கள் சிக்கலைச் எதிர்நோக்குகின்றன. அமெரிக்காவின் பால் பொருள் உற்பத்தித்துறை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆண்டுதோறும் 2.2 பில்லியன் டொலர் இழக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் முன்னுரைத்துள்ளனர்.

பால் பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் பண்ணையாளர்கள் சிலர் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தொழிலை விட்டு விலகுகின்றனர்.

அந்நாட்டில் பால் பொருள்களின் உற்பத்தி இவ்வாண்டு அரை மில்லியன் மெட்ரிக் டன் வரை குறையக்கூடும் என்று Bloomberg குறிப்பிட்டுள்ளது.

உலகில் ஆக அதிக அளவில் பாலை உற்பத்தி செய்யும் இந்தியா, உலகின் பால் பொருள்களில் கால்வாசியை வழங்குகிறது. அந்நாட்டில் பால் பெரும்பாலும் சிறு பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பண்ணையாளர்கள் வெப்பத்தைத் தணிக்கக் குளிரூட்டும் கருவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இருப்பினும் சிலருக்கு அது கட்டுப்படியான தெரிவு அல்ல.

Amul போன்ற மாபெரும் நிறுவனங்கள் இருப்பைப் பாதுகாப்பதற்கான சவாலைச் சந்திக்கின்றன. நிலைமை தொடர்ந்தால் வருங்காலத்தில் பால் பொருள்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...