Newsஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு - சமாளிக்க முடியாமல் திணறல்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – சமாளிக்க முடியாமல் திணறல்

-

ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வெண்ணெய் முதல் பால்மாவு வரை பால் பொருள்களுக்குப் பஞ்சம் ஏற்படக்கூடிய அபாயம் எழுந்துள்ளது.

அளவுக்கு அதிகமான வெப்பமும் வறட்சியும் மாடுகளுக்கு மனவுளைச்சலை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அது குறித்து Bloomberg செய்தி நிறுவனம் தகவல் அளித்தது. அதிகரிக்கும் வெப்பநிலையால் பசுக்கள் குறைந்த பாலை உற்பத்தி செய்கின்றன..

வறட்சி, கடுமையான மழை ஆகியவற்றால் சாப்பிடக்கூடிய புல்லும் அவ்வளவாக இல்லை என கூறப்படுகின்றது.

உலகின் பால் உற்பத்தி வட்டாரங்கள் சிக்கலைச் எதிர்நோக்குகின்றன. அமெரிக்காவின் பால் பொருள் உற்பத்தித்துறை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஆண்டுதோறும் 2.2 பில்லியன் டொலர் இழக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் சிலர் முன்னுரைத்துள்ளனர்.

பால் பொருள்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் பண்ணையாளர்கள் சிலர் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தொழிலை விட்டு விலகுகின்றனர்.

அந்நாட்டில் பால் பொருள்களின் உற்பத்தி இவ்வாண்டு அரை மில்லியன் மெட்ரிக் டன் வரை குறையக்கூடும் என்று Bloomberg குறிப்பிட்டுள்ளது.

உலகில் ஆக அதிக அளவில் பாலை உற்பத்தி செய்யும் இந்தியா, உலகின் பால் பொருள்களில் கால்வாசியை வழங்குகிறது. அந்நாட்டில் பால் பெரும்பாலும் சிறு பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படுகிறது.

பண்ணையாளர்கள் வெப்பத்தைத் தணிக்கக் குளிரூட்டும் கருவிகளை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இருப்பினும் சிலருக்கு அது கட்டுப்படியான தெரிவு அல்ல.

Amul போன்ற மாபெரும் நிறுவனங்கள் இருப்பைப் பாதுகாப்பதற்கான சவாலைச் சந்திக்கின்றன. நிலைமை தொடர்ந்தால் வருங்காலத்தில் பால் பொருள்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கரை ஒதுங்கியதில் 28 திமிங்கலங்கள் உயிரிழப்பு

மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய 160க்கும் மேற்பட்ட திமிங்கலங்களில் 28 இறந்துவிட்டன. 100க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை மீண்டும் கடலுக்கு விட தன்னார்வ குழுக்கள் நடவடிக்கை...

மெல்போர்னின் Highpoint ஷாப்பிங் சென்டரில் மற்றொரு கத்திக்குத்து

மெல்போர்னில் உள்ள ஹை பாயின்ட் ஷாப்பிங் சென்டரில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் மைனர் ஒருவர் உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள்...

சுற்றுலாப் பயணிகள் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் தனது வாழ்நாளில் பார்வையிட வேண்டிய சிறந்த நாடுகளில் ஆஸ்திரேலியா இடம்பிடித்துள்ளது. CEOWORLD இதழ் இந்த நாடுகளுக்கு 2024 ஆம் ஆண்டையொட்டி பெயரிட்டுள்ளது. இங்கு விஜயம்...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற விரும்புவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மற்றும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற எதிர்பார்த்துள்ள சர்வதேச மாணவர்களுக்காக புதிய விழிப்புணர்வு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் மெல்போர்ன் பல்கலைக்கழக இணையதளத்திற்குச்...

ஆஸ்திரேலியாவில் ட்விட்டர் முடக்கப்படும் அபாயம்

ஃபெடரல் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால், ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளமான ட்விட்டர் முடக்கப்படும் அபாயம் உள்ளது. ட்விட்டருக்கு நன்றி செலுத்தும் முடிவில்லாத ஒலியைத் தவிர வேறு எதையும் உருவாக்காத...