Newsஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் - இணையத்தில் கசிந்த தரவுகள்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – இணையத்தில் கசிந்த தரவுகள்

-

ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கானோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளன.

அவை ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibankஇல் இருந்து களவாடப்பட்டுள்ளன.

வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்ததேதி, அரசாங்க அடையாள எண், மருத்துவ சிகிச்சை விவரங்கள், அவற்றுக்காகப் பெற்றுக்கொண்ட காப்புறுதித்தொகை என அனைத்துத் தகவல்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

Medibank நிறுவனத்தைச் சேர்ந்த 9.7 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் கடந்த மாதம் களவுபோயின. அந்த நிறுவனம் பிணைப்பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து, அத்தரவுகளின் மாதிரி இன்று வெளியானது.

இன்னும் அதிகமான தகவல்கள் வெளியிடப்படும் என அதனைக் களவாடிய கும்பல் எச்சரித்துள்ளது.

முக்கியமாக, 500,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மருத்துவத் தகவல்கள் களவுபோயிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

கடன்பற்று அட்டை அல்லது வங்கி விவரங்கள் எதுவும் கசியவில்லை என நிறுவனம் குறிப்பிட்டது.

நடந்த சம்பவத்திற்காக நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டது. பிரச்சினையைக் கையாள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.

ஏற்கெனெவே கடந்த செம்டெம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான Optusஇலும், சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் ஊடுருவப்பட்டன.

Latest news

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆஸ்திரேலியாவின் ராக்கெட் ஏவுதல் தாமதம்

ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட்டை வடக்கு குயின்ஸ்லாந்திலிருந்து நேற்று காலை விண்வெளிக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பாராத ஒரு பிரச்சினை காரணமாக தாமதத்தை சந்தித்துள்ளதாக Gilmour Space...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

தெற்கு ஆஸ்திரேலியாவில் நீச்சல் வீரர் ஒருவரை தாக்கிய சுறா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Port Noarlunga-வில் சுறா கடித்ததால் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஆபத்தான, ஆனால் நிலையான நிலையில் இருப்பதாக அவசர சேவைகளிடம் இருந்த...

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...