Newsஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் - இணையத்தில் கசிந்த தரவுகள்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – இணையத்தில் கசிந்த தரவுகள்

-

ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கானோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளன.

அவை ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibankஇல் இருந்து களவாடப்பட்டுள்ளன.

வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்ததேதி, அரசாங்க அடையாள எண், மருத்துவ சிகிச்சை விவரங்கள், அவற்றுக்காகப் பெற்றுக்கொண்ட காப்புறுதித்தொகை என அனைத்துத் தகவல்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

Medibank நிறுவனத்தைச் சேர்ந்த 9.7 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் கடந்த மாதம் களவுபோயின. அந்த நிறுவனம் பிணைப்பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து, அத்தரவுகளின் மாதிரி இன்று வெளியானது.

இன்னும் அதிகமான தகவல்கள் வெளியிடப்படும் என அதனைக் களவாடிய கும்பல் எச்சரித்துள்ளது.

முக்கியமாக, 500,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மருத்துவத் தகவல்கள் களவுபோயிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

கடன்பற்று அட்டை அல்லது வங்கி விவரங்கள் எதுவும் கசியவில்லை என நிறுவனம் குறிப்பிட்டது.

நடந்த சம்பவத்திற்காக நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டது. பிரச்சினையைக் கையாள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.

ஏற்கெனெவே கடந்த செம்டெம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான Optusஇலும், சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் ஊடுருவப்பட்டன.

Latest news

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

போராட்டங்களின் போது காவல்துறையின் அறிவுறுத்தல்களை மீறினால் $5,500 அபராதம்

இஸ்ரேலிய ஜனாதிபதி Isaac Herzog சிட்னிக்கு வருகை தருவதற்கு முன்னதாக, நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியதை சட்டப்பூர்வமாக சவால் செய்யத்...

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தலுக்கு முன்னதாக லிபரல்-தொழிலாளர் கட்சிகளிடமிருந்து சிறப்பு வாக்குறுதிகள்

தெற்கு ஆஸ்திரேலிய தேர்தல் மார்ச் 21 ஆம் திகதி நடைபெற உள்ளது. மேலும் லிபரல் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இரண்டும் தேர்தலுக்கு முன்னதாக மக்களை ஈர்க்க...

மெல்பேர்ணில் தீப்பிடித்த தேவாலயம் – ஒருவர் கைது

மெல்பேர்ணின் மேற்கில் உள்ள ஒரு தேவாலயம் இரவில் தீப்பிடித்ததை அடுத்து, ஒருவர் போலீஸ் காவலில் உள்ளார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்குப் பிறகு, மெல்பேர்ண் CBD க்கு...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...