Newsஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் - இணையத்தில் கசிந்த தரவுகள்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – இணையத்தில் கசிந்த தரவுகள்

-

ஆஸ்திரேலியாவில் நூற்றுக் கணக்கானோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளன.

அவை ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான Medibankஇல் இருந்து களவாடப்பட்டுள்ளன.

வாடிக்கையாளரின் பெயர், முகவரி, பிறந்ததேதி, அரசாங்க அடையாள எண், மருத்துவ சிகிச்சை விவரங்கள், அவற்றுக்காகப் பெற்றுக்கொண்ட காப்புறுதித்தொகை என அனைத்துத் தகவல்களும் அதில் வெளியிடப்பட்டுள்ளன.

Medibank நிறுவனத்தைச் சேர்ந்த 9.7 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் கடந்த மாதம் களவுபோயின. அந்த நிறுவனம் பிணைப்பணம் கொடுக்க மறுத்ததை அடுத்து, அத்தரவுகளின் மாதிரி இன்று வெளியானது.

இன்னும் அதிகமான தகவல்கள் வெளியிடப்படும் என அதனைக் களவாடிய கும்பல் எச்சரித்துள்ளது.

முக்கியமாக, 500,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மருத்துவத் தகவல்கள் களவுபோயிருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.

கடன்பற்று அட்டை அல்லது வங்கி விவரங்கள் எதுவும் கசியவில்லை என நிறுவனம் குறிப்பிட்டது.

நடந்த சம்பவத்திற்காக நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டது. பிரச்சினையைக் கையாள நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.

ஏற்கெனெவே கடந்த செம்டெம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான Optusஇலும், சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் ஊடுருவப்பட்டன.

Latest news

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை சொந்தமாக வைத்திருப்பதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

நூற்றுக்கணக்கான ஜெல்லிமீன்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மெல்பேர்ண் கடற்கரை

விக்டோரியாவில் உள்ள Port Phillip விரிகுடாவின் கரையில் இன்று ஏராளமான lion’s mane ஜெல்லிமீன்கள் வந்துள்ளன . இதன் விளைவாக, மெல்பேர்ணில் உள்ள Sandringham கடற்கரையை உடனடியாக...