Newsஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் - இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

ஆஸ்திரேலியாவை உலுக்கும் வெள்ளம் – இந்த ஆண்டின் மிகப்பெரிய வெள்ளம்

-

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் கொட்டித் தீர்த்த அடைமழை காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, உட்புறப் பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இருப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு அப்பகுதிவாழ் ஆயிரக்கணக்கான மக்களுக்குப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள 4ஆவது மிகப்பெரிய வெள்ளமாகும்.

நியூ சவுத் வேல்ஸ்சின் தென்மேற்குப் பகுதியிலும் விக்டோரியாவின் வடகிழக்குப் பகுதியிலும் ஒரே இரவில் மோசமான வானிலையால் ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்தன. வெள்ளப் பேரிடரால் ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் மக்களுக்குத் துயர் மேல் துயர் ஏற்பட்டுள்ளது.

திடீர் வெள்ளம் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது என்றும் மீட்பு முயற்சிகளில் மத்திய அரசாங்கம் மாநிலங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி (Anthony Albanese) Twitterரில் பதிவிட்டார்.

நியூ சவுத் வேல்ஸின் (New South Wales) கிராமப்புறங்களில் சாலைகள், பாலங்கள், பண்ணைகள் ஆகிய அனைத்தும் நீரில் மூழ்கின.

சிட்னியில் (Sydney) இருந்து வடமேற்கில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Molong என்னும் இடம்தான் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,000க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.

வெள்ளத்தில் கப்பல் கொள்கலன்களும் வீட்டுப் பொருள்களும் மிதக்கும் காட்சி அடங்கிய காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

கப்பல் கொள்கல லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வெள்ளம் ஏறிய சாலையில் நகர முடியாமல் சிக்கியிருப்பதால் Molongகிற்கு அவசர உதவிக் குழுவை அனுப்பும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...