Breaking Newsசிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் - பாதியில் கைவிடப்பட்ட...

சிட்னி வந்த கப்பலில் 800 பேருக்கு கொவிட் – பாதியில் கைவிடப்பட்ட பயணம்

-

சிட்னி வந்த தி மஜெஸ்டிக் பிரின்சஸ் (The Majestic Princess) பயணக்கப்பலில் நூற்றுக்கணக்கான பயணிகளிடையே COVID-19 சம்பவங்கள் பதிவாயின.

அதன் காரணமாக 12 நாள் பயணத்தைப் பாதியில் கைவிட்டுக் கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நிறுத்தப்பட்டது.

கப்பலில் 4,600 பயணிகளும் ஊழியர்களும் பயணம் சென்றுகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

3,300 பயணிகளைச் சோதித்ததில் சுமார் 800 பயணிகளுக்கும் சில ஊழியர்களுக்கும் கோவிட் நோய் ஏற்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

நோய்த்தொற்று ஏற்பட்ட பயணிகளுக்கு லேசான அறிகுறிகள் இருந்தன அல்லது அறவே அறிகுறிகள் இல்லை.

அவர்கள் கப்பலிலிருந்து வெளியேறி 5 நாள்களுக்குத் தனிமைப்படுத்துமாறு ஆலோசனை கொடுக்கப்பட்டது.

நோய்த்தொற்றினால் பாதிக்கப்படாதவர்கள் கப்பலைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...